வெள்ளி, டிசம்பர் 12, 2014

மனிதரை மதியுங்கள்!

ஆஸ்திரேலியாவில் ஒரு நகரில் மருத்துவமனையின் முதியோர்நல சிகிச்சை பிரிவில் ஒரு முதியவர் காலமானார். அவரிடம் மதிப்பான எதுவும் இல்லை என்றுதான் நினைத்தார்கள். பின்பு செவிலியர் அவர் விட்டுசென்ற சொற்பமான பொருட்களை சோதனையிட்டால் கிடைத்தது ஒரு 'கவிதை'. அதன் தரமும் பொருளும் கவனத்தை ஈர்த்ததால் மருத்துவமனை செவிலியர் அனைவருக்கும் நகலெடுத்து கொடுத்தனர்.
When an old man died in the geriatric ward of a nursing home in an Australian country town, it was believed that he had nothing left of any value.Later, when the nurses were going through his meagre possessions, They found this poem. Its quality and content so impressed the staff that copies were made and distributed to every nurse in the hospital.One nurse took her copy to Melbourne. The old man’s sole bequest to posterity has since appeared in the Christmas editions of magazines around the country and appearing in mags for Mental Health. A slide presentation has also been made based on his simple, but eloquent, poem.And this old man, with nothing left to give to the world, is now the author of this ‘anonymous’ poem winging across the Internet. Cranky Old ManWhat do you see nurses? ……What do you see?What are you thinking .. . when you’re looking at me?A cranky old man, … …not very wise,Uncertain of habit .… … . .. with faraway eyes?Who dribbles his food .. . … . . and makes no reply.When you say in a loud voice . .’I do wish you’d try!’Who seems not to notice …the things that you do.And forever is losing … …… A sock or shoe?Who, resisting or not … … lets you do as you will,With bathing and feeding … .The long day to fill?Is that what you’re thinking?. .Is that what you see?Then open your eyes, nurse .you’re not looking at me.I’ll tell you who I am … . .. As I sit here so still,As I do at your bidding, .… . as I eat at your will.I’m a small child of Ten . .with a father and mother,Brothers and sisters .… .. . who love one anotherA young boy of Sixteen … .. with wings on his feetDreaming that soon now …… a lover he’ll meet.A groom soon at Twenty … ..my heart gives a leap.Remembering, the vows .. .. .that I promised to keep.At Twenty-Five, now … . .I have young of my own.Who need me to guide … And a secure happy home.A man of Thirty . .… . . My young now grown fast,Bound to each other …. With ties that should last.At Forty, my young sons .. .have grown and are gone,But my woman is beside me . . to see I don’t mourn.At Fifty, once more, .. …Babies play ‘round my knee,Again, we know children … . My loved one and me.Dark days are upon me … . My wife is now dead.I look at the future … … . I shudder with dread.For my young are all rearing .… young of their own.And I think of the years … And the love that I’ve known.I’m now an old man … … .. and nature is cruel.It’s jest to make old age … … . look like a fool.The body, it crumbles .. .. . grace and vigour, depart.There is now a stone … where I once had a heart.But inside this old carcass . A young man still dwells,And now and again … . . my battered heart swellsI remember the joys … . .. . I remember the pain.And I’m loving and living … … . life over again.I think of the years, all too few …. gone too fast.And accept the stark fact … that nothing can last.So open your eyes, people .… . .… open and see.Not a cranky old man .Look closer … . see .. .…. …. . ME!!Remember this poem when you next meet an older person who you might brush aside without looking at the young soul within. We will all, one day, be there, too!PLEASE SHARE THIS POEM!The best and most beautiful things of this world can’t be seen or touched. They must be felt by the heart!Very Respectfully,Scott Sonnon www.breathinggift.com (My free book and video gift to you.)
பின்பு அதை மெல்போர்னுக்கு எடுத்து வந்த ஒரு செவிலியர், இளையோர் அனைவருக்குமான அந்த முதியவரின் சொத்தான கவிதையை மனநலம் சார்ந்த ஒரு பத்திரிக்கையின் கிருஸ்துமஸ் பதிப்பில் வெளியிட்டார். ஒரு காணொளி கோவையும் இந்த எளிய, ஆனால் தெளிவான கவிதையை வைத்து தயாரிக்கப்பட்டது.
இந்த முதியவர், உலகிற்கு பொருளேதும் விட்டு செல்லவில்லை என்றாலும் ‘பெயரிலி’ கவிஞனாக இணையத்தில் உலகை வலம் வருகிறார்.

முன்னுரையும் கவிதையும் தமிழாக்கம்: Dr.Surya CR

எரிச்சலூட்டும் முதியவனா?!---
என்ன பார்க்கிறீர் செவிலியரே? என்ன பார்க்கிறீர்?
என்னை பார்க்கும்போது என்ன நினைக்கிறீர்?
மண்டையில் ஏதுமில்லா - எரிச்சலூட்டும்
முதியவன் என்றா?

எங்கோ வெறிக்கும் கண்களுடன்..
எக்குதப்பான தடுமாற்றங்களுடன்..
வாயில் வழியவிடும் உணவுடன்..
வாய்மொழியற்ற பார்வையுடன்..

உங்களை, நீங்கள் செய்வதை கவனிக்காமல்..
எங்கோ ஒரு வெளியில் -
எல்லாம் இழந்துகொண்டிருக்கும் நிலையில்..
‘உன்னால் முடியும் செய் பார்க்கலாம்’ – என
உரக்க நீங்கள் என்னிடம் சொல்லும்போதும்..

எதிர்ப்போ இல்லையோ..
எனக்கு உங்களது சேவைகளாய் -
உணவூட்டி உடல்துடைத்து..
என் நாளை நிரப்பிக்கொண்டிருக்கும் நீங்கள் -
என்னை பார்த்து அப்படித்தான் எண்ணியிருப்பீர்கள்!

அப்படி என்றால்..
நீங்கள் உண்மையில் என்னை பார்க்கவில்லை..
கண்ணை திறவுங்கள் தாதியரே!
உங்கள் சொற்படியே நடந்துகொண்டு..
நீங்கள் தருவதையே சாப்பிட்டுக்கொண்டு..
இதோ அசைவின்றி அமர்ந்துகொண்டு
நான் யாரென சொல்கிறேன்.. கேளுங்கள்!

பெற்றோரும் உடன்பிறந்த
சகோதர சகோதரிகளுடன்
அன்பால் இணைந்த
பத்து வயது குழந்தையாகவும்...
பின்பு சிறகு முளைத்து பறக்கும் மனதுடன்
காதலை கண்டுகொண்டு கனவுகளுடன்
எனது பதினாறிலும் இருந்தேன்!

இருபதில் இணையை தேடிகொண்டேன்!
இதயம் துள்ளிக்குதிக்க
இன்றும் இனிமையாய் ஒலிக்கிறது
நான் எடுத்துக்கொண்ட கல்யாண உறுதிமொழிகள்...

என்துணை தேடும் மகவுகளுடன்
மனமகிழும் வீடும் அமைந்து இருந்தது
அதோ என் இருபத்தைந்தில்..
முப்பது வயது மனிதனாக
வேகமாய் வளரும் குழந்தைகளின்
நெருங்கிய பாசப்பிணைப்பை உணர்ந்தேன்!

நாற்பதில் இளைஞரான என் மகன்கள்
வளர்ந்துவிட்டதால் விட்டு சென்றார்கள்..
நான் கலங்கி போகாமல்
பார்த்துக்கொண்டதென்னவோ
எனது அருகிலேயே இருந்த துணைவிதான்..

ஐம்பது வயது ஆனது.. மீண்டும் குழந்தைகள்
என் காலை சுற்றி விளையாடின..
ஆனால் எனக்கும் எனது இணைக்கும்
குழந்தைகளை பற்றிதான் தெரியுமே!

எனக்கு இருண்ட காலம் உதித்தது..
என் மனைவி மறைந்துபோனாள்..
எதிரே என் காலத்தை பார்க்கிறேன்..
நெஞ்சை உலுக்குகிறது உதறல் எடுக்கிறது..

என் மகவுகளின் கவனிப்புகளெல்லாம்
அவர்களின் மகவுகளுக்கே!
எனது வருடங்களை..
அதிலிருந்த அன்பை நினைத்துப்பார்க்கிறேன்!
இப்போது நான் முதியவன்...
இயற்கை கொடூரமானது –
அது எள்ளிநகையாடி
முட்டாளாக்கும் முதுமையை திணிக்கிறது..

வனப்பையும் வீரியத்தையும்
உதிர்கிறது என் உடம்பு
இதோ கல்லான இதுகூட
இதயமாய் இருந்ததுதான் ஒருகாலத்தில்..
ஆனால் பிணம்போன்ற இந்த உடலில்
உள்ளேயொரு இளைஞனாக இன்றும்
இழைந்துகொண்டேதான் இருக்கிறேன்!

உழைத்து ஓய்ந்துவரும் இதயம்
வீங்கி ஏங்குகிறது...
அந்த மகிழ்ச்சிகளும் வலிகளும்
நீங்காமல் நிலைக்கிறது..
வாழ்க்கையை அனுபவித்து
மீண்டும் வாழ நினைக்கிறது..

கடந்த வருடங்கள் என்னவோ சிலதுதான்..
ஆனால் விரைந்து கழிந்து போனதே..
எதுவும் நிலைத்திருக்க முடியாது என்ற
எளிய அறிவை இங்கு ஏற்கவைக்கிறது..

ஆகவே கண்களை திறவுங்கள் மக்களே
திறந்து பாருங்கள்..

இங்கே எரிச்சலூட்டும் முதியவனில்லை
உற்று நோக்குங்கள்..
பாருங்கள்...

நான்! _________________________________
அடுத்தமுறை வயதானவரை பார்க்கும் போது இந்த கவிதையை நினைவுகொள்ளுங்கள். உள்ளே இருக்கும் இளமையான ஆத்மாவை வெளிதோற்றத்தை வைத்து உதாசீனம் செய்துவிடாதீர்கள். நாமெல்லோரும் ஒருநாள் அப்படி இருக்கப் போவது உறுதி. இல்லையா?


உலகின் மிகவும் அழகான சிறந்த விஷயங்களை பார்க்கவோ, கையால் தொடவோ முடியாது; மனதிலிருந்து உணர்ந்து பார்க்கவே முடியும்!

இதை பகிர்ந்துகொள்ளுங்கள் (மூலம் பில்லிஸ் மக்கோர்மாக்; தழுவல் டேவ் கிரிஃபித்)

வெள்ளி, நவம்பர் 28, 2014

மாதத்தில் ஒருநாள் மௌனம் கடைப்பிடிக்கும் நாடு எது?

உலகின் மிகப்பெரிய இஸ்லாம் நாடான இந்தோனேசியாவில் உள்ள ஒரூ தீவு தான் பாலி (BALI). இங்கே 93 சதவீத மக்கள் ஹிந்துக்கள். 42 லட்சம் ஹிந்துக்களின் தாயகமாக பாலி விளங்குக...ிறது.
ஒரு காலத்தில் ஹிந்து ராஜ்யமாக இருந்த இந்தோனேசியாவில், முஸ்லிம்களின் படையெடுப்பிற்கு பிறகு பெரும்பான்மை மக்கள் முஸ்லிம்களாக மாற்றப்பட்டனர். இஸ்லாமியர்கள் மஜாபஹிட் (Majapahit ) என்ற கடைசி ஹிந்து மன்னரை வீழ்த்திய பிறகு ஹிந்து மதத்தை விட்டு மாறாமல் இருந்த மக்கள் பாலிக்கு குடிபெயர்ந்தனர்.
 
பாலியை பற்றிய சுவாரசியமான தகவல்கள்.
உலகின் மிகப்பெரிய இஸ்லாம் நாடான இந்தோனேசியாவில் உள்ள ஒரூ தீவு தான் பாலி (BALI). இங்கே 93 சதவீத மக்கள் ஹிந்துக்கள். 42 லட்சம் ஹிந்துக்களின் தாயகமாக பாலி விளங்குகிறது.

ஒரு காலத்தில் ஹிந்து ராஜ்யமாக இருந்த இந்தோனேசியாவில், முஸ்லிம்களின் படையெடுப்பிற்கு பிறகு பெரும்பான்மை மக்கள் முஸ்லிம்களாக மாற்றப்பட்டனர். இஸ்லாமியர்கள் மஜாபஹிட் (Majapahit ) என்ற கடைசி ஹிந்து மன்னரை வீழ்த்திய பிறகு ஹிந்து மதத்தை விட்டு மாறாமல் இருந்த மக்கள் பாலிக்கு குடிபெயர்ந்தனர்.

பாலியை பற்றிய சுவாரசியமான தகவல்கள்.

1. இங்கே ஒவொரு ஆண்டும் மார்ச் மாதத்தில் ஒரு நாள் மௌன விரதம் கடைபிடிக்கபடுகிறது. Nyepi day என்று சொல்கிறார்கள். 2013ல் மார்ச் 12ம் தேதி இந்த மௌன தினம் வருகிறது. ஹிந்துகளின் பண்டிகை போன்ற அந்த நாளில் இந்தோனேசியா முழுவதும் விடுமுறை அளிக்கபடுகிறது. காலை 6 மணி முதல், மாலை 6 மணி வரை எந்த போக்குவரத்தும் இருக்காது. பன்னாட்டு விமான நிலையமான Denpasar (bali) விமான நிலையம் கூட மூடப்பட்டு இருக்கும். யாரும் பேசிக்கொள்ள மாட்டார்கள். வீட்டில் இருந்தபடியே தியானம் செய்வார்கள்.

2. பாலியில் உள்ள ஹிந்து கலாச்சாரம் இந்திய ரிஷிகளிடமிருந்து வந்தது தான். பாலி பள்ளிகளில் இன்றும் கூட ரிஷிகளை பற்றிய பாடங்கள் இருக்கின்றன. புராணங்களில் வரும் மார்கண்டேய, அகஸ்திய, பரத்வாஜ ரிஷிகளை பற்றி இந்தியாவில் யாருக்கும் தெரியாத நிலையில், இந்த ரிஷிகளை பற்றி பாலி குழந்தைகள் கூட தெரிந்து வைத்து இருக்கிறார்கள்.

3. பாலியில் ஆணுக்கும், பெண்ணுக்கும் தேசிய உடை 'வேஷ்டி' தான். எந்த ஒரு பாலி கோவிலுக்கும் வேஷ்டி அணியாமல் ஆணோ, பெண்ணோ உள்ளே செல்ல முடியாது. இந்தியாவில் கூட சில கோவில்களில்தான் பாரம்பரிய உடை கட்டாயமாக உள்ளது (குருவாயூர் போன்ற). ஆனால் பாலியில் அனைத்து கோவில்களிலும் நமது உடை அணிந்து தான் செல்ல வேண்டும்.

4. பாலியின் சமூக, பொருளாதார, அரசியல் கட்டமைப்பு ரிஷிகள் உருவாகிய tri-hita-karana என்ற கோட்பாட்டின் படி தான் அமைந்துள்ளது. அதைதான் அவர்கள் தங்கள் வாரிசுகளுக்கும் சொல்லிக்கொடுக்கிறார்கள். Parahyangan - Pawongan - Palemahan என்று பொருள்படும். tri-hita-karana என்பது சமஸ்கிருதம்.

5. Trikala Sandhya என்பது சூரிய நமஸ்காரம். அணைத்து பாலி பள்ளிகளிலும் கட்டயாமாக மூன்று வேலை சூரிய நமஸ்காரம் செய்கிறார்கள். அதே போல மூன்று வேலையும் காயத்ரி மந்திரத்தை அவர்கள் பள்ளியில் சொல்லவேண்டும். பொதுவாக பாலி ரேடியோவில் மூன்று வேலை சூரிய நமஸ்காரம் செய்ய வேண்டிய நேரத்தில் அதை ஒலிபரப்புவார்கள். இந்தியாவில் சூரிய நமஸ்காரதிர்க்கு எதிர்ப்பு தான் வருகிறது. 5 வேலை நமாஸ் செய்ய சொல்வார்கள் போல.

6. பாலி கோவில் பூசாரிகளின் சம்பளத்தை இந்தோனேசியா அரசாங்கமே கொடுக்கிறது. முஸ்லிம் மத நாடான இந்தோனேசியாவில் அனைத்து மத கோவில் பூசாரிகளின் சம்பளத்தை அரசே கொடுக்கிறது. ஆனால் இந்தியா மத சார்பற்ற நாடு, இருந்தாலும் முஸ்லிம்களுக்கு மட்டுமே ஹஜ் செல்ல பணத்தை வாரி இறைக்கின்றது. நமக்கு மட்டும் சொந்த தயாரிப்பில் அல்வாவை தருகிறது

7. இந்தோனேசிய நாட்டின் மூதாதையர்கள் அனைவரும் ஹிந்துக்களே, அதனால் அவர்களின் பண்பாடுகளில் இந்திய கலாசாரமே அதிகம் கலந்துள்ளது.

8. உலகில் அரிசி விளைவிக்கும் நாடுகளில் இந்தோனேசியா முக்கிய இடம் வகிக்கிறது, பாலி தீவு முழுவதும் அரிசி வயல்கள் தான் இருக்கின்றது. பாலி மக்கள் விளைந்த அரிசியை முதலில் ஸ்ரீ தேவி, பூதேவி (Shri Devi and Bhu Devi ) ஆகிய தெய்வங்களுக்கு தான் படைக்கிறார்கள். அனைத்து வயல்களிலும் இந்த இரண்டு தெய்வங்களும் கோவில் இருக்கும், விவசாயிகள் இந்த இரு தெய்வங்களை வணங்கிய பிறகு தான் விவசாய தொழிலுக்கு செல்வார்கள். 9ஆவது நூற்றாண்டிலேயே விவசாய மற்றும் நீர்பாசன விதிமுறைகளை ஹிந்து பெரியோர்கள் கற்றுகொடுத்து இருக்கிறார்கள். அதற்க்கு Subak System என்று பெயர். இங்கே நீர் பாசனம் முழுவதும் கோவில் பூசாரிகளின் கட்டுபாட்டில் தான் இருக்கும். உலக வங்கியே Subak System பின் பற்றுமாறு மற்ற நாட்டினருக்கு அறிவுரை வழங்கி உள்ளது குறிப்பிட தக்கது. இந்தியர்கள் கொண்டு வந்த இந்த விஞ்ஞானம் இன்று இந்தியாவில் இல்லை.

9. பாலி ஹிந்துக்கள் பூஜை செய்யும் பொழுது பிரிண்ட் செய்யப்பட்ட புத்தகங்களை வாசிப்பது இல்லை. இன்றும் கூட அவர்கள் கையால் எழுதப்பட்ட ஓலை சுவடியையே (Lontar) பயன்படுத்துகிறார்கள். ராமாணயம் அனைவருக்கும் தெரிந்து இருக்கும்.ராமாணய ஓலைசுவடியை நல்ல நாட்களில் எடுத்து வரும் திருவிழா நடைபெறும். 10. அனைத்து திருவிழாகளிலும் பாலி நடனம் ஆடுவார்கள், அதில் பெரும்பாலும் இராமாயண இதிகாசங்களை கதைகளாக சொல்வார்கள். ஹிந்துக்களின் சொர்க்க பூமி பாலி என்பதில் எந்த சந்தேகமும் இல்லை. உலகின் அழகிய தீவுகளில் பாலி முக்கிய இடம் வகிக்கிறது. அழகிய இடங்கள், அமைதியான வாழ்க்கை முறை, பாரம்பரியமிக்க ஹிந்து கலாச்சாரம், நடனம், இசை என்று இந்த தீவு உலக சுற்றுலா பயணிகளை அதிகம் கவருவதில் ஆச்சிரியம் ஏதும் இல்லை.

via Anbu Selvi

Relaxplzz
1. இங்கே ஒவொரு ஆண்டும் மார்ச் மாதத்தில் ஒரு நாள் மௌன விரதம் கடைபிடிக்கபடுகிறது. Nyepi day என்று சொல்கிறார்கள். 2013ல் மார்ச் 12ம் தேதி இந்த மௌன தினம் வருகிறது. ஹிந்துகளின் பண்டிகை போன்ற அந்த நாளில் இந்தோனேசியா முழுவதும் விடுமுறை அளிக்கபடுகிறது. காலை 6 மணி முதல், மாலை 6 மணி வரை எந்த போக்குவரத்தும் இருக்காது. பன்னாட்டு விமான நிலையமான Denpasar (bali) விமான நிலையம் கூட மூடப்பட்டு இருக்கும். யாரும் பேசிக்கொள்ள மாட்டார்கள். வீட்டில் இருந்தபடியே தியானம் செய்வார்கள்.
2. பாலியில் உள்ள ஹிந்து கலாச்சாரம் இந்திய ரிஷிகளிடமிருந்து வந்தது தான். பாலி பள்ளிகளில் இன்றும் கூட ரிஷிகளை பற்றிய பாடங்கள் இருக்கின்றன. புராணங்களில் வரும் மார்கண்டேய, அகஸ்திய, பரத்வாஜ ரிஷிகளை பற்றி இந்தியாவில் யாருக்கும் தெரியாத நிலையில், இந்த ரிஷிகளை பற்றி பாலி குழந்தைகள் கூட தெரிந்து வைத்து இருக்கிறார்கள்.
3. பாலியில் ஆணுக்கும், பெண்ணுக்கும் தேசிய உடை 'வேஷ்டி' தான். எந்த ஒரு பாலி கோவிலுக்கும் வேஷ்டி அணியாமல் ஆணோ, பெண்ணோ உள்ளே செல்ல முடியாது. இந்தியாவில் கூட சில கோவில்களில்தான் பாரம்பரிய உடை கட்டாயமாக உள்ளது (குருவாயூர் போன்ற). ஆனால் பாலியில் அனைத்து கோவில்களிலும் நமது உடை அணிந்து தான் செல்ல வேண்டும்.
4. பாலியின் சமூக, பொருளாதார, அரசியல் கட்டமைப்பு ரிஷிகள் உருவாகிய tri-hita-karana என்ற கோட்பாட்டின் படி தான் அமைந்துள்ளது. அதைதான் அவர்கள் தங்கள் வாரிசுகளுக்கும் சொல்லிக்கொடுக்கிறார்கள். Parahyangan - Pawongan - Palemahan என்று பொருள்படும். tri-hita-karana என்பது சமஸ்கிருதம்.
5. Trikala Sandhya என்பது சூரிய நமஸ்காரம். அணைத்து பாலி பள்ளிகளிலும் கட்டயாமாக மூன்று வேலை சூரிய நமஸ்காரம் செய்கிறார்கள். அதே போல மூன்று வேலையும் காயத்ரி மந்திரத்தை அவர்கள் பள்ளியில் சொல்லவேண்டும். பொதுவாக பாலி ரேடியோவில் மூன்று வேலை சூரிய நமஸ்காரம் செய்ய வேண்டிய நேரத்தில் அதை ஒலிபரப்புவார்கள். இந்தியாவில் சூரிய நமஸ்காரதிர்க்கு எதிர்ப்பு தான் வருகிறது. 5 வேலை நமாஸ் செய்ய சொல்வார்கள் போல.
6. பாலி கோவில் பூசாரிகளின் சம்பளத்தை இந்தோனேசியா அரசாங்கமே கொடுக்கிறது. முஸ்லிம் மத நாடான இந்தோனேசியாவில் அனைத்து மத கோவில் பூசாரிகளின் சம்பளத்தை அரசே கொடுக்கிறது. ஆனால் இந்தியா மத சார்பற்ற நாடு, இருந்தாலும் முஸ்லிம்களுக்கு மட்டுமே ஹஜ் செல்ல பணத்தை வாரி இறைக்கின்றது. நமக்கு மட்டும் சொந்த தயாரிப்பில் அல்வாவை தருகிறது
7. இந்தோனேசிய நாட்டின் மூதாதையர்கள் அனைவரும் ஹிந்துக்களே, அதனால் அவர்களின் பண்பாடுகளில் இந்திய கலாசாரமே அதிகம் கலந்துள்ளது.
8. உலகில் அரிசி விளைவிக்கும் நாடுகளில் இந்தோனேசியா முக்கிய இடம் வகிக்கிறது, பாலி தீவு முழுவதும் அரிசி வயல்கள் தான் இருக்கின்றது. பாலி மக்கள் விளைந்த அரிசியை முதலில் ஸ்ரீ தேவி, பூதேவி (Shri Devi and Bhu Devi ) ஆகிய தெய்வங்களுக்கு தான் படைக்கிறார்கள். அனைத்து வயல்களிலும் இந்த இரண்டு தெய்வங்களும் கோவில் இருக்கும், விவசாயிகள் இந்த இரு தெய்வங்களை வணங்கிய பிறகு தான் விவசாய தொழிலுக்கு செல்வார்கள். 9ஆவது நூற்றாண்டிலேயே விவசாய மற்றும் நீர்பாசன விதிமுறைகளை ஹிந்து பெரியோர்கள் கற்றுகொடுத்து இருக்கிறார்கள். அதற்க்கு Subak System என்று பெயர். இங்கே நீர் பாசனம் முழுவதும் கோவில் பூசாரிகளின் கட்டுபாட்டில் தான் இருக்கும். உலக வங்கியே Subak System பின் பற்றுமாறு மற்ற நாட்டினருக்கு அறிவுரை வழங்கி உள்ளது குறிப்பிட தக்கது. இந்தியர்கள் கொண்டு வந்த இந்த விஞ்ஞானம் இன்று இந்தியாவில் இல்லை.
9. பாலி ஹிந்துக்கள் பூஜை செய்யும் பொழுது பிரிண்ட் செய்யப்பட்ட புத்தகங்களை வாசிப்பது இல்லை. இன்றும் கூட அவர்கள் கையால் எழுதப்பட்ட ஓலை சுவடியையே (Lontar) பயன்படுத்துகிறார்கள். ராமாணயம் அனைவருக்கும் தெரிந்து இருக்கும்.ராமாணய ஓலைசுவடியை நல்ல நாட்களில் எடுத்து வரும் திருவிழா நடைபெறும். 10. அனைத்து திருவிழாகளிலும் பாலி நடனம் ஆடுவார்கள், அதில் பெரும்பாலும் இராமாயண இதிகாசங்களை கதைகளாக சொல்வார்கள். ஹிந்துக்களின் சொர்க்க பூமி பாலி என்பதில் எந்த சந்தேகமும் இல்லை. உலகின் அழகிய தீவுகளில் பாலி முக்கிய இடம் வகிக்கிறது. அழகிய இடங்கள், அமைதியான வாழ்க்கை முறை, பாரம்பரியமிக்க ஹிந்து கலாச்சாரம், நடனம், இசை என்று இந்த தீவு உலக சுற்றுலா பயணிகளை அதிகம் கவருவதில் ஆச்சிரியம் ஏதும் இல்லை.
நன்றி:அன்புச் செல்வி 

புதன், நவம்பர் 26, 2014

ஈழத்து முன்னோடி எழுத்தாளர் எஸ்.பொ அவர்கள் காலமானார்

இலங்கையின் முதன்மை எழுத்தாளர்களில் ஒருவரும் , அவுஸ்திரேலியாவில் வசித்து வந்தவருமான  'எஸ்.பொ' என அழைக்கப்படும் எஸ். பொன்னுத்துரை அவர்கள் அவுஸ்திரேலியாவின் சிட்னி நகரத்தில் இன்று (26 – கார்த்திகை – 2014 ) அன்று காலமானார்.
Es Po 
அன்னார் யூன் 4ம் திகதி , 1932, நல்லூர், யாழ்ப்பாணத்தில் பிறந்தார் பின்னர் அண்ணாமலைப் பல்கலைக் கழகத்திலும், சென்னை கிறித்தவக் கல்லூரியிலும் உயர்கல்வி பயின்றார்.
நைஜீரியாவில் ஆங்கிலத்துறையில் தலைவராக பணியாற்றிய இவர் மட்டக்களப்பில் ஆசிரியராகவும் அதிபராகவும் பணியாற்றினார். நாவல், சிறுகதை, நாடகம், கவிதை, பத்தி எழுத்து, விமர்சனம் முதலிய துறைகளிலும் ஆளுமையுடன் செயலாற்றினார்.
இலங்கையில் முற்போக்கு எழுத்தாளர் சங்கம் தீவிரமாகச் செயற்பட்டுக் கொண்டிருந்த காலத்தில் அதிலிருந்து விலகி நற்போக்கு அணியைத் தொடக்கினார்.

இளம்வயதில் இலங்கை கம்யூனிஸ்ட் கட்சியின் ஆதரவாளராகச் செயற்பட்டார். பின்னர் அவர்களுடன் முரண்பட்டுத் தனித்துவமாகச் செயற்பட்டார்.

அவுஸ்த்திரேலியாவில் சிறிது காலம் வெளிவந்த "அக்கினிக்குஞ்சு" சர்வதேச இதழின் கௌரவ ஆசிரியராக விளங்கியவர். 'செம்பென் ஒஸ்மான' என்ற செனகல் நாட்டு எழுத்தாளர் எழுதிய 'ஹால' என்ற நாவலை மொழிபெயர்த்துள்ளார். மற்றும் 'நுகுகி வா தியங்கோ' என்ற கென்யா நாட்டு இலக்கிய எழுத்தாளரின் "Weep Not Child" என்ற நாவலை தமிழில் "தேம்பி அழாதே பாப்பா" என்ற பெயரில் மொழிபெயர்த்துள்ளார்.

 பிறமொழிப் படைப்புகள் சிலவற்றைத் தமிழுக்குக் கொண்டுவந்தவர்.
''வீ" - ''அவா" - ''ஆண்மை" ஆகிய சிறுகதைத் தொகுதிகளையும் ''தீ" - ''சடங்கு" - ''மாயினி" நாவல்களுட்பட பல நூல்களை வெளியிட்டுள்ளார்.
இவரது சிறுகதைகள் யாவும் தொகுக்கப்பட்டு ''எஸ். பொ. கதைகள்" என்ற தொகுதியாக வெளிவந்துள்ளது.


இவரது சில சிறுகதைகளும் ''தீ" - ''சடங்கு" நாவல்களும் ''வரலாற்றில் வாழ்தல்" என்ற அதிக பக்கங்கள் கொண்ட சுய வரலாற்று நூலும் பல சர்ச்சைகளையேற்படுத்திக் கவனத்தில் கொள்ளப்பட்டவை.

சென்னையில் 'மித்ர' பதிப்பகத்தினை ஆரம்பித்துப் பல படைப்பாளிகளின் நூல்களையும் வெளியிட்டுள்ளார்.

இவரது நேர்காணல்கள், கட்டுரைகள் அடங்கிய இனி ஒரு விதி செய்வோம் என்ற நூலும் வெளிவந்துள்ளது. சுமார் இரண்டாயிரம் பக்கங்களில் வரலாற்றில் வாழ்தல் என்ற தமது சுய வரலாற்று நூலையும் எழுதியுள்ளார். சென்னையில் 'மித்ர' பதிப்பகத்தின் மூலம் நூல் வெளியீடுகளிலும் ஈடுபட்டவர் என்பதும் குறிப்பிடத்தக்கது.
 
இவருக்கு தமிழ் இலக்கியத் தோட்டத்தின் 2010 க்கான 'வாழ்நாள் இயல் விருது' வழங்கப்பட்டது.
 ஈழத்தின் 'ஜெயகாந்தன் எனவும், 'இலக்கியச் சண்டியர்' எனவும் அனைவராலும் அழைக்கப் பட்ட திரு.ச.பொன்னுத்துரை அவர்களின் மறைவிற்கு அந்திமாலை ஆசிரிய பீடத்தின் அஞ்சலிகள்.

ஞாயிறு, நவம்பர் 16, 2014

குறள் காட்டும் பாதை

இன்றைய குறள்
அதிகாரம் 126 நிறை அழிதல்
 
 
'புலப்பல்' எனச்சென்றேன் புல்லினேன் நெஞ்சம் 
கலத்தல் உறுவது கண்டு. (1259) 
 
பொருள்: காதலனோடு 'ஊடல் கொள்வேன்' என்று நினைத்துச் சென்றேன். ஆனால் என் நெஞ்சம் என்னை விட்டு அவரோடு கூடுவதைக் கண்டு வேறு வழி இல்லாமல் அவரைத் தழுவினேன். 

இன்றைய சிந்தனைக்கு

இயேசுக் கிறிஸ்து
jesus

நீங்கள் மனந்திரும்பிச் சிறு பிள்ளைகளைப் போல் ஆகாவிட்டால் விண்ணரசில் நுழைய மாட்டீர்கள். சிறு பிள்ளையைப் போலத் தம்மைத் தாழ்த்திக் கொள்பவரே விண்ணரசில் மிகப் பெரியவர்.

கோபம் செய்யும் தீங்குகள் என்னென்ன தெரியுமா?

ஆக்கம்:மனோகரன் பி.கே, சென்னை.
1) கவலை

கவலைகள் பலவிதம். ஒவ்வொன்றும் ஒருவிதம். ‘மதிப்பெண் குறைந்து விட்டது’, ‘கேட்ட சப்ஜெக்ட் கிடைக்கவில்லை’, ‘பிடித்த கல்லூரியில் படிக்க வாய்ப்பில்லை’ என்பது போன்ற கவலைகள் படிக்கும் மாணவனுக்கு. ‘வேலை இல்லை’, ‘போதிய சம்பளம் கிடைக்கவில்லை’ போன்ற கவலைகள் படித்த இளைஞனுக்கு.  இப்படி அவரவர்க்கு ஆயிரம் கவலைகள்.
ஆயிரத்துக்கும் மேற்பட்ட அரிய கண்டுபிடிப்புகளுக்கு காரணமானவர் தாமஸ் ஆல்வா எடிசன்.  எடிசன் பலமுறை தோல்வி கண்டவர். ஒரு முறை எடிசனின் ஆய்வுக்கூடம் கட்டுப்படுத்த முடியாத அளவுக்கு தீப்பிடித்து எரிந்து கொண்டிருந்தது.  அந்த நேரத்திலும் கூட தன் மனைவியை அழைத்து ‘அம்மாவைக் கூப்பிடு,  இது மாதிரி ஒரு தீ விபத்தை அம்மா இனிமேல் எங்கேயும் பார்க்க முடியாது’ என்றாராம்.  சோதனைகள் பல வந்த போதும் அவர் மனம் கலங்கியதில்லை. கவலை கொண்டதில்லை.
நாடு முழுவதும் பேசப்படுபவர். உலக நாடுகளே அண்ணாந்து பார்க்கக் கூடிய அளவுக்கு உயர்ந்தவர் முன்னாள் குடியரசுத் தலைவர் அப்துல் கலாம் அவர்கள்.   அவருடைய மாணவப் பருவத்தில் தனக்கு அன்பளிப்பாக வந்த புத்தகத்தை விற்கும் அளவுக்கு வறுமையில் இருந்த போதும் அதைப்பற்றி கவலை கொள்ளாமல் வாழ்க்கையில் எதிர்நீச்சல் போட்டு வெற்றி கண்டார்.
‘மாமனிதன் யாரெனில் எவன் ஒருவன் தவிர்க்க முடியாததை துணிச்சலுடன் ஏற்றுக் கொண்டு அதைப் பொறுமையுடன் தீர்த்துக் கொள்கிறானோ அவன்தான்’ என்கிறார்  தத்துவப் பேரறிஞர் நீட்சே.
வாழ்க்கை என்றால் இன்ப துன்பங்கள் இருக்கும். சில சமயங்களில் துன்பத்தின் காரணமாக கவலை கொள்ள நேரிடும். தவறில்லை, ஆனால் அதை விடாப்பிடியாகக் கொண்டு வாழக் கூடாது.  கவலையே வாழ்க்கையாகி விடக்கூடாது.
அது ஒரு கிராமம். கிராமத்துக்கு துறவி ஒருவர் வந்தார். ஊர் மக்கள் ‘எங்கள் கவலைகள் ஒழிய வேண்டும். நாங்கள் விரும்புவது எல்லாம் நடக்க வேண்டும். அதற்கு நீங்கள்தான் அருள் புரிய வேண்டும்’ என்று துறவியிடம் வேண்டினார்கள்.
எல்லாவற்றையும் மௌனமாக கேட்டுக் கொண்ட துறவி அடுத்த நாள் அந்த கிராமத்தில் ஓர் அசரீரியை ஒலிக்கச் செய்தார். ‘நாளை பகல் 12 மணிக்கு இந்தக் கிராமத்தில் ஓர் அதிசயம் நடக்க இருக்கிறது. அந்த நேரம் உங்கள் எல்லா கவலைகளையும் ஒரு கற்பனையான சாக்குப்பையில் கொண்டுபோய் ஆற்றில் போட்டு விடுங்கள்.  பிறகு அதே கற்பனைக் கோணிப்பையில் நீங்கள் விரும்பும் வீடு, நகை, நட்டு அனைத்தையும் அதில் போட்டு வீட்டுக்கு கொண்டு வருவதாகக் கற்பனை செய்து கொள்ளுங்கள்.  உங்கள் கற்பனை பலிக்கும்.
அதன்படி அடுத்த நாள் மக்கள் தங்களின் பிரச்சனைகளை மூட்டை கட்டி ஆற்றில் போட்டு விட்டு கார், பங்களா, நெக்லஸ் என்று தாங்கள் சந்தோஷம் என்று கருதிய அனைத்து பொருட்களையும் கற்பனை மூட்டையில் கட்டியெடுத்துக் கொண்டு ஊர் திரும்பினார்கள்.
திரும்பியவர்கள் ஆச்சரியத்தில் திக்குமுக்காடிப் போனார்கள். ஆம், அசரீரி சொன்னது அப்படியே பலித்து விட்டது.  கார் வேண்டும் என்று நினைத்தவரின் வீட்டு முன் நிஜமாகவே கார் நின்றிருந்தது. மாடி வீடு வேண்டும் என்று கேட்டவரின் வீடு மாடி வீடாக மாறியிருந்தது. எல்லோருக்கும் சந்தோஷம் பிடிபடவில்லை,
ஆனால் அந்த சந்தோஷம் கொஞ்ச நேரம்தான்.  பிறகு, ‘ஐயையோ, நாம் ஒற்றைவட தங்க செயின் கேட்டோம்.  அதுதான் கிடைத்தது.  ஆனால் அடுத்த வீட்டுப் பெண் ரெட்டை வடச்செயின் கேட்டு வாங்கி விட்டாளே! நாம் வீடுதான் கேட்டோம்.  ஆனால் எதிர்வீட்டுக்காரர் பங்களா கேட்டு வாங்கி விட்டாரே! நாமும் அது போல கேட்டிருக்கலாமே! சந்தர்ப்பத்தை நழுவ விட்டு விட்டோமே’ என்று மீண்டும் கவலைப்படத் தொடங்கி விட்டார்கள்.
கடல் முழுவதும் நீர், என்றாலும் கப்பல் மட்டும் கம்பீரமாகச் செல்கிறது,  மனம் எனும் கப்பலுக்குள் கவலை என்னும் நீர் புகாத வரை அமைதிக்குப் பஞ்சமில்லை, ஆனந்தத்துக்கு அளவில்லை.

(2) கோபம்
“அழுக்காறு அவா, வெகுளி இன்னாச்சொல்’ அதாவது பொறாமை, பேராசை, கோபம், கடுஞ் சொற்கள் ஆகிய நான்கினையும் ஒதுக்கி வாழ்வதே அறம் என்கிறார் வள்ளுவர்.
இதில் கோபம் மிகவும் கொடியது. கோபத்தின் போது அமிர்தத்தை சாப்பிட்டாலும் இனிப்பாக இருக்காது. மகிழ்ச்சியாக இருக்கும்போது மிளகாயைக் கடித்தாலும் காரமாகத் தெரியாது.
கோபம் தோன்றும் போது மிருக குணம் வெளிப்படும். அப்போது கண்கள் சிவக்கும். நாடித்துடிப்பு அதிகரிக்கும். இதயம் படபடக்கும். மூச்சு வாங்கும். கோபம் வந்தால் முக மலர்ச்சியும் அக மகிழ்ச்சியும் அகன்று விடும்.
கோபம் நிறைந்த மூளையில் பகுத்தறிவு வேலை செய்யாது. கோபம் பகுத்தறிவின் விரோதி.
தீயினும் கொடியது சினம்.  ‘கொள்ளி’  என்பது நெருப்பிற்கு ஒரு பெயர்.  விறகைப் பற்றிய நெருப்பானது விறகைக் கொண்டே தன்னைக்காட்டி நிற்கும்.  விறகு முழுவதும் எரிந்து அழியும் போது தானும் இல்லாது போகும். அதுபோல மனிதனைப் பற்றிய கோபம் அவன் இயல்பாகிய அன்பையும் அறிவையும் அழித்து விட்டு தானும் இல்லாது போகும்.
இரும்பிலிருந்தே உருவாகி இரும்பையே அழிக்கும் துரு போன்றது கோபம். அது நம்முள் உண்டாகி நம்மையே அழிக்கும் நோய்க்கிருமி.
கோபம் என்னும் கொடிய நாகத்தை ‘பொறுமை’ என்னும் மகுடியால் கட்டுப்படுத்த வேண்டும். கோபத் தீயை ‘அன்பு’ என்னும் குளிர் நீரால் அணைத்துவிட வேண்டும்.
கண்டிப்பு வேறு. கோபம் வேறு. கோபம் வெறுப்பை உண்டாக்கும். கண்டிப்பு ஒழுங்கை உண்டாக்கும். கண்டிப்பு கொண்டவர்களாக இருக்கலாம். ஆனால் கோபம் கொண்டவர்களாக இருக்கக் கூடாது.
கோபத்தின் தாக்கத்திற்கு முதலில் ஆளாவது மனம். கோபத்தின் பிடியில் மனம் சிக்கிக் கொண்டால் உடல் முழுவதும் அதற்கு அடிபணிய வேண்டியதுதான்.  அதன் பிடியில் சிக்காமல் மனம் பண்பட்டு விட்டால் கோபம் அடிபணிந்து விடும்.
ஒரு முறை புத்தர் தனது சீடருடன் சென்று ஒரு வீட்டில் பிச்சை கேட்டார்.  புத்தரைப் பார்த்து அந்த வீட்டிலிருந்த பெண்மணி திட்டி விரட்டினாள். தன் குருவைத் திட்டியதால் சீடர் கோபம் கொண்டார்.
அந்தப் பெண்ணுக்கு சரியான பாடம் புகட்ட சீடர் புத்தரிடம் அனுமதி கேட்டார்.  அவர் ஒன்றும் சொல்லாமல் நடந்து கொண்டிருந்தார்.  நல்ல வெயில், தன் கையிலிருந்த கமண்டலத்தை சீடரிடம் கொடுத்து விட்டு ஓய்வெடுத்தார்.
மீண்டும் மாலையில் பயணத்தைத் தொடர்ந்தார். அப்போது சீடரின் கையிலிருந்த கமண்டலத்தைப் பார்த்த புத்தர் ‘இது யாருடையது?’ என்று கேட்டார். அதற்கு சீடர் ‘சுவாமி! இது உங்களுடையது’ என்றார்.
உடனே புத்தர், அந்தக் கமண்டலத்தை ஒருமுறை வாங்கிப் பார்த்து விட்டு ‘இல்லை, இதை உனக்கு பரிசாகக் கொடுத்து விட்டேன். அது உன்னுடையதுதான்’ என்று திரும்பவும் சீடரிடம் கொடுத்து விட்டார்.
அன்று இரவு ‘இந்தக் கமண்டலம் யாருடையது?’ என்று மீண்டும் கேட்டார்.  அதற்கு சீடர் ‘சுவாமி, இது என்னுடையது!’ என்றார். புத்தர் சிரித்துக் கொண்டே இன்று மாலை ‘இது உங்களுடையது’  என்றாய்.  இப்போதோ, ‘இது என்னுடையது’ என்கிறாய்,
‘சுவாமி, கமண்டலத்தைத் தாங்கள் எனக்கு பரிசாகக் கொடுத்து விட்டதாகச் சொன்னீர்கள்.  நானும் அதை ஏற்றுக் கொண்டதால் ‘என்னுடையது’ என்றேன்.  ஆனால் முதல் முறை அதை நான் என்னுடையதாக எடுத்துக் கொள்ளவில்லை,  ஆகவே, ‘உங்களுடையது’ என்றேன்.
புன்னகையுடன் புத்தர் சொன்னார். ‘இதுபோல்தான் அந்தப் பெண்மணி திட்டிய வார்த்தைகளை நான் என்னுடையதாக எடுத்துக் கொள்ளவில்லை.  அது அந்தப் பெண்மணிக்கே சொந்தம்.  அதனால்தான் நீ பாடம் புகட்ட அவசியம் இல்லை என்று விட்டு விட்டேன்’ என்றார்.
கோபம் நம்மை ‘கொல்லாமல்’ இருக்க நாம் கோபம் கொள்ளாமல் இருப்போம்!
(3) அனுபவம்
வாழ்வை அர்த்தப்படுத்திக் கொள்வதில் பேருதவி புரிவது அனுபவ அறிவு.  அனுபவ அறிவு என்பது தனிமதிப்புக் கொண்டது. வாழ்க்கை முழுவதற்குமே அனுபவ அறிவு உதவும். அனுபவம் என்பது தனிப்பட்ட முறையில் ஒருவருக்கு ஏற்பட்டதாகவும் இருக்கலாம் அல்லது மற்றவர்களுக்கு ஏற்பட்டு அதன் மூலம் பெற்றதாகவும் இருக்கலாம்.
‘அனுபவம் என்பது நமக்கு என்ன நடக்கிறது என்பதல்ல – நமக்கு ஒன்று நடக்கும் போது நாம் என்ன செய்கிறோம் என்பது தான்’ என்று ஆங்கிலத்தில் ஒரு முதுமொழி உண்டு. ஒவ்வொன்றையும் நாமே அனுபவித்துத்தான் பாடங்களைத் தெரிந்து கொள்ள வேண்டும் என்று நினைத்தால் அதற்குக் காலம் போதாது.
பிற மனிதர்களின் வெளித்தோற்றத்தை மட்டுமே பார்ப்பது வேறு. அவர்கள் எப்படி வெவ்வேறு அனுபவங்களை எதிர்கொள்கிறார்கள் என்று பார்ப்பது வேறு.  மற்றவர் அனுபவங்களைப் பரிசீலிக்கும்போது, அதில் அவர்கள் புத்திசாலித்தனமும் தெரியலாம். தவறான போக்கும் தெரியலாம். தேவையானதை மட்டும் எடுத்துக் கொள்ள வேண்டும்.
வாழ்க்கையில் நமக்கு எந்தெந்த சூழலில் குழப்பம் இருக்கிறதோ, தெளிவு அல்லது தகவல் தேவைப்படுகிறதோ, அப்போது அதேபோன்ற சூழ்நிலைகளைச் சந்தித்த பிற மனிதர்களிடம், அவர்கள் அனுபவம் பற்றிக் கேட்டுத் தெரிந்து கொள்வது உபயோகமாய் இருக்கும்.
அனுபவத்திற்கும் வயதிற்கும் தொடர்பு உண்டு,  வயது ஏற ஏற அனுபவத்தின் அளவும் ருசியும் அதிகரிக்கும்.  வாழ்க்கை என்பது வாழும் நாட்களைக் கொண்டு கணக்கிடுவது அல்ல. எத்தனை தழும்புகள், விழுப்புண்கள், வடுக்களை பெற்றிருக்கிறோம் என்பதில்தான் இருக்கிறது.  வாழ்க்கையின் சுகமே சுமையில் தான் இருக்கிறது. Life is nothing but Memories – வாழ்க்கை என்பது வெறும் நினைவுகளைக் கொண்டது.  ஓடி ஓடி உழைத்து ஓய்ந்து உட்கார்ந்த காலத்தில் அசைபோட்டுப் பார்க்க நமக்கு அனுபவங்கள் இருக்க வேண்டும்.
வாழ்க்கையில் அனுபவங்களைப் பெற ‘ரிஸ்க்’ எனப்படும் இடர்பாடுகளை மனமுவந்து ஏற்க வேண்டும். அரசன் நினைத்தால் எத்தனை புலி, சிங்கத்தை வேண்டுமானாலும் கொன்று வந்து அரண்மனையில் குவிக்க முடியும்.  ஆனால் அரசன் அதை விரும்புவதில்லை.  வில்லெடுத்து தானே வேட்டைக்குச் செல்கிறான்.  எந்த நிமிடத்தில், எந்த கோணத்தில், எந்த மிருகம் தன்னை வந்து தாக்கும் என்று தெரியாத நிலை,  என்றாலும் அத்தகைய அச்சம் நிறைந்த, பயம் கலந்த வாழ்விலும் ஒரு சுகம் இருப்பதால்தான் அரசன் வேட்டைக்குச் செல்கிறான்.  இந்த நியதி வேட்டைக்கு மட்டுமல்ல, வாழ்க்கைக்கும் பொருந்தும்.
‘அனுபவம் ஒரு விலை உயர்ந்த நகை, கூடுதலான விலை கொடுத்தே வாங்க வேண்டும்’ என்கிறார் ஷேக்ஸ்பியர். ‘அனுபவம் ஒரு நம்பகமான விளக்கு அதைத் துணையாகக் கொண்டு வழிநடக்கலாம்’ என்கிறார் மற்றோர் அறிஞர்.
அனுபவங்களில் சம்பந்தப்பட்ட மனிதர்களை மறந்துவிட்டு, அவற்றின் பாடங்களுக்கே முக்கியத்துவம் தர வேண்டும்.
பிறர் செய்த நல்லவற்றில் மட்டும் அல்ல, பிறர் செய்த தவறுகளில் இருந்தும் நாம் பாடம் கற்றுக்கொள்ள வேண்டும்.
ஒரு மைதானத்தில் ஆடுகள் மேய்ந்து கொண்டிருந்தன.  காவல் நாய்கள் நன்றாக தூங்கிக் கொண்டிருந்தன.  மேய்ப்பவன் மரத்தடியில் உட்கார்ந்து புல்லாங்குழல் வாசித்துக் கொண்டிருந்தான்.
தூரத்தில் வேலியின் உட்புற ஓரமாக ஆட்டுக்குட்டி மேய்ந்து கொண்டிருந்ததை வேலிக்குளிருந்த ஓநாய் பார்த்தது.  வேலிக்குள் தலையை நுழைத்துக் கொண்டு ஓநாய் எதையோ பார்ப்பதுபோல் பாசாங்கு செய்தது. அதைப் பார்த்த ஆட்டுக்குட்டி, ‘உனக்கு என்ன வேண்டும்’ என்று கேட்டது.
அதற்கு மாமிசத்தை உணவாகக் கொள்ளும் ஓநாய் ‘நண்பனே! பச்சைப் புல் கிடைக்குமா என்று பார்க்கிறேன். புல் என்றால் எனக்கு ரொம்பப் பிடிக்கும்,  எனக்கு கொஞ்சம் புல் கிடைத்தாலும் போதும். அதைக் கொண்டு பசியாறுவேன்’ என்றது.
அதற்கு ஆட்டுக்குட்டி ‘உன் பசிக்கு புல் போதும் என்கிறாயே! என்னைப் போல் புல்லைத் தின்பவன்தான் நீ என்றால் நான் உன்னுடன் சேர்ந்து நண்பனாக இருக்க விரும்புகிறேன் என்று சொல்லிக் கொண்டே அந்த ஆட்டுக்குட்டி வேலி இடுக்கில் நுழைந்து ஓநாய் பக்கம் போயிற்று. உடனே ஓநாய் அதன்மீது பாய்ந்து அதைக் கொன்று தின்றது.
பிறர் அனுபவத்தை அறிந்து நடக்காதவர்கள் ஆபத்தில் அகப்பட்டுக் கொள்வார்கள்.
நன்றி:thannambikkai.org

வெள்ளி, நவம்பர் 07, 2014

உலக நாயகனுக்கு அந்திமாலையின் பிறந்தநாள் வாழ்த்துக்கள்!!!

தமிழ்த் திரை உலகில் மட்டுமன்றி, ஹிந்தி, மலையாளம், கன்னடம்,தெலுங்கு திரைப்பட உலகிலும் தனக்கென்று ஒரு முத்திரை பதித்த, இன்றைய தினம் தனது அறுபதாவது அகவையில் அடியெடுத்து வைக்கும் ரசிகர்களின் இதயம் கவர்ந்த 'உலக நாயகன்', பத்மஸ்ரீ, பத்மபூஷன், டாக்டர் கமல்ஹாசன் அவர்களுக்கு அந்திமாலையின் பவழ விழா பிறந்த தின வாழ்த்துக்கள்.
"உன்னைப் பெற்றதனால் தமிழ்நாடு மட்டுமல்ல, முழு உலகமும் பெருமை கொள்கிறது" வாழ்க பல்லாண்டு!



மிக்க அன்புடன் 
ஆசிரிய பீடம் 
அந்திமாலை இணையம்  
டென்மார்க். 

கமலுக்கு 60 வயதா? நம்பவே முடியாம இருக்கு!

உலகநாயகன் கமல்ஹாசன்

இந்தியத் திரைப்படத்துறையில், குழந்தை நட்சத்திரமாக ‘களத்தூர் கண்ணம்மாவில்’ அறிமுகமாகி, தனது ஈடுஇணையற்ற நடிப்புத் திறமையை வெளிப்படுத்தி, ‘உலகநாயகன்’ என்று போற்றப்படும் கமல்ஹாசன் அவர்கள், இருநூற்றுக்கும் மேற்பட்ட இந்திய திரைப்படங்களில் நடித்துள்ளார். தனது வாழ்க்கை முழுவதையும் திரைத்துறைக்கே அர்பணித்தத் திறமையான நடிகர்களுள் ஒருவராவர். நான்கு முறை தேசிய விருதும், பதினெட்டு முறை ஃபிலிம்ஃபேர் விருதும் பெற்ற கமல்ஹாசன் அவர்களைப் பற்றியறிய மேலும் தொடர்ந்துப் படிக்கவும்.
பிறப்பு: நவம்பர் 7, 1954
பிறந்த இடம்: பரமக்குடி, தமிழ்நாடு, இந்தியா
தொழில்: நடிகர், திரைக்கதையாசிரியர், இயக்குனர், பாடலாசிரியர், பின்னணிப் பாடகர், நடன அமைப்பாளர், தயாரிப்பாளர்
நாட்டுரிமை: இந்தியா
 ஆரம்ப கால வாழ்க்கை
கமல்ஹாசன் அவர்கள், தமிழ்நாட்டின் ராமநாதபுரம் மாவட்டத்திலிருக்கும் பரமக்குடியில் குற்றவியல் வழக்கறிஞராக இருந்த டி.சீனிவாசனுக்கும், ராஜலக்ஷ்மி அவர்களுக்கும் மகனாக பிறந்தார். நான்கு குழந்தைகளில், கடைக்குட்டியாகப் பிறந்த கமலுக்கு, இளம் வயதிலிருந்தே, படிப்பைத் தவிர மற்ற கலைகளில் ஆர்வம் அதிகமிருந்ததால், மிகுதியான நேரத்தை அதில் செலவிட்டார். சாருஹாசன், சந்திரஹாசன், மற்றும் நளினி ரகு இவருடைய உடன் பிறந்தவர்கள். கமல் அவர்களின் தந்தை, கட்டுப்பாடு மிகுந்தவராக இருந்ததால், தனது மகன்களை நன்குப் படிக்க வைக்க எண்ணினார். அவரின் எண்ணத்திற்கேற்ப, கமலின் மூத்த சகோதரர்கள் இருவரும் தனது தந்தையை உதாரணமாகக் கொண்டு, சட்டம் பயின்றனர்.
இல்லற வாழ்க்கை
1978ல், வாணி கணபதி என்பவரை மணமுடித்த கமல்ஹாசன், பத்து ஆண்டுகள் கழித்து அவரிடம் விவாஹரத்துப் பெற்று, சரிகா என்ற நடிகையை மணமுடித்தார். அவர்களுக்கு, ஷ்ருதி ஹாசன் மற்றும் அக்ஷரா என்ற மகள்கள் உள்ளனர். பின்னர், கமல் சரிகா உறவில் ஏற்பட்ட விரிசல் காரணமாக சரிகா அவர்கள், கமலிடம் விவாஹரத்துக் கோரினார். 2002ல் சரிகாவுடனான உறவிலிருந்து விடுதலைப் பெற்ற பின், 2005லிருந்து முன்னாள் நடிகை கௌதமியுடன் இணைந்து வாழ்ந்துக் கொண்டிருக்கிறார்.
திரையுலக வாழ்க்கை
தனது திரையுலக வாழ்க்கையை, ஒரு குழந்தை நட்சத்திரமாகத் தொடங்கிய கமல்ஹாசன் அவர்கள், தீவிர நாடகக் கலைஞராகவும் இருந்து வருகிறார். 1960ல் வெளியான ‘களத்தூர் கண்ணம்மா’ திரைப்படத்தில் முதன்முதலில் அறிமுகமான போது, அவருக்கு வயது ஆறு. அத்திரைப்படத்தின் சிறந்த குழந்தை நட்சத்திரத்திற்கான ‘இந்திய தேசிய விருதைப்’ பெற்றார். குழந்தை நட்சத்திரமாகப் பல திரைப்படங்களில் நடித்த இவர், ஒரு இளைஞனாக, 1970ல் வெளியான ‘மாணவன்’ என்ற திரைப்படத்தில் ஒரு பாடலில் மற்றும் தோன்றினார். 1973ல், வெளியான கே.பாலச்சந்தர் அவர்களின் ‘அரங்கேற்றம்’ என்ற திரைப்படம் அவருக்கு ஒரு திருப்புமுனையாக இருந்தது. துணைக் கதாப்பாத்திரமாக பல கதைகளில் நடித்தாலும், அவர் எதிர்மறையான கதாப்பாத்திரங்களில் நடித்த ‘சொல்லத்தான் நினைக்கிறன்’, ‘குமாஸ்தாவின் மகள்’ போன்ற திரைப்படங்கள் பெரிதும் பேசப்பட்டவை. 1974ல் வெளிவந்த, ‘நான் அவன் இல்லை’ திரைப்படமே அவர் துணைக் கதாப்பாத்திரத்தில் நடித்த கடைசித் திரைப்படமாகும்.
1974ல் வெளியான ‘கன்னியாகுமரி’ என்ற மலையாளப் படம் மூலமாக கதாநாயகனாக உருவெடுத்தார். இந்தப் படம் அவருக்கு அம்மொழிக்கான ஃபிலிம்ஃபேர் விருதினைப் பெற்றுத் தந்தது. தமிழ்த் திரையுலகில் நாயகனாக அவர் அறிமுகமாகிய முதல் படம், கே.பாலச்சந்தர் அவர்கள் இயக்கிய ‘அபூர்வ ராகங்கள்’. இப்படத்திற்காக, அவருக்கு ‘ஃபிலிம்ஃபேர் விருதும்’, ‘தேசிய விருதும்’ கிடைத்தது. 1970களில், ரஜினிகாந்த்தும், கமல்ஹாசனும் பல திரைப்படங்களில் இணைந்து நடித்தனர். ’16 வயதினிலே’, ‘மூன்று முடிச்சு’, ‘அவர்கள்’, ‘இளமை ஊஞ்சல் ஆடுகிறது’ போன்ற திரைப்படங்கள் அவ்விருவரின் கூட்டணிக்கு நல்ல எடுத்துக்காட்டு. பின்னர், தொடர்ந்து வெற்றிப் படங்களான ‘சிகப்பு ரோஜாக்கள்’, ‘வருமையின் நிறம் சிகப்பு’, ‘நீயா’, ‘கல்யாண ராமன்’, ‘நினைத்தாலே இனிக்கும்’, ‘ராஜப்பார்வை’, ‘மூன்றாம் பிறை’ ஆகிய படங்கள் இவருக்குப் பல விருதுகளைத் தேடித்தந்தது.
அதே சமயத்தில், அவர் ஹிந்தித் திரையுலகிலும் கவனம் செலுத்தினார். ‘ஏக் துஜே கே லியே’, ‘சாகர்’, ‘ராஜ் திலக்’, கிரஃப்தார்’ ஆகிய திரைப்படங்கள் அவர் நடித்த ஹிந்தி திரைப்படங்களில் சில. 1990களில் வெளியான ‘அபூர்வ சகோதர்கள்’, ‘குணா’, ‘தேவர் மகன்’, ‘மகாநதி’, ‘குருதிப்புனல்’, ‘இந்தியன்’, ‘அவ்வை ஷண்முகி’ போன்ற படங்கள், வெற்றிகரமான பாக்ஸ் ஆஃபிஸ் திரைப்படங்களாக உருவெடுத்தன. 1990ல், அவரின் அற்புதமான நடிப்புத் திறமைக்காக, இந்திய அரசு அவருக்கு மிக உயரிய விருதான ‘பத்மஸ்ரீ’ விருதை வழங்கியது. அன்று முதல், இவர் ‘பத்மஸ்ரீ கமல்ஹாசன்’ என்றும் அழைக்கப்படுகிறார்.
இரண்டு ஆண்டுகள் நீண்ட இடைவெளிக்குப்பின் வெளியான திரைப்படம், ‘ஹே ராம்’. இது அவருடைய சொந்தத் தயாரிப்பான ‘ராஜ்கமல் பட நிறுவனத்தின்’ படைப்பாகும். அப்போது ஆட்சியிலிருந்த காங்கிரஸ், இந்த படத்திற்குத் தடை விதித்தாலும், இப்படம் பெருமளவு வெற்றியை அடைந்தது. பின்னர், ‘தெனாலி’, ‘பம்மல் கே. சம்பந்தம்’, ‘பஞ்சதந்திரம்’, ‘வசூல் ராஜா MBBS’ போன்ற திரைப்படங்கள் அவருடைய நகைச்சுவை உணர்வுக்காகப் பெரிதும் பேசப்பட்டவை. கெளதம் மேனன் இயக்கத்தில் வெளியான ‘வேட்டையாடு விளையாடு’, கே.எஸ்.ரவிக்குமார் இயக்கத்தில் வெளிவந்த ‘தசாவதாரம்’ உலகளவில் பெரும் வெற்றியைத் தேடித்தந்தது. அண்மையில் அவர் நடித்து, இயக்கி தமிழ், தெலுங்கு மற்றும் ஹிந்தியில் வெளியான ‘விஸ்வரூபம்’ பாக்ஸ் ஆஃபிஸில் வெற்றிப் பெற்று வெளிவந்த சில நாட்களிலேயே 120 கோடி வருவாயை ஈட்டியுள்ளது.
நடிப்பைத் தவிர, அவர் பல படங்களுக்கு, பாடல்களும் எழுதியிருக்கிறார். மேலும், தமிழ், ஹிந்தி, தெலுங்கு, மலையாளம், மற்றும் ஆங்கிலத்தில் எழுபதுக்கும் மேற்பட்டப் பாடல்களைப் பாடியும் உள்ளார். திறமைசாளியான கமல்ஹாசன் அவர்கள், பரதநாட்டிய கலைஞர் என்பதால், பல படங்களுக்கு நடனக்கலைஞராகவும் இருந்துள்ளார்.
இலக்கிய படைப்புகள்
தமிழ் இலக்கியத்தில் அவருக்கு இருக்கும் ஆர்வத்தாலும், எழுத்துத் திறனாலும் ‘மையம்’ என்ற பத்திரிக்கையை இயக்கும் பணியில் ஈடுபட்டிருந்தார். இவ்விதழைக் ‘கமல்ஹாசன் நற்பணி மன்றம்’ இயக்கி வருகிறது. தனது ரசிகர் சங்கம் மூலமாக, சினிமா, குழந்தை வசவு, காஷ்மீர் மோதல், போதை மருந்துப் போன்ற சமுதாயப் பிரச்சனைகளை, தனது புத்தகமான ‘தேடித் தீர்ப்போம் வா’ என்ற தலைப்பில் சேகரித்து வெளியிட்டார்.
பொதுநலப் பணிகள்
‘கமல் நற்பணி இலக்கியம்’ என்ற அமைப்பின் கீழ் பல சமுதாயப் பொது நல அமைப்புகள் அமைத்து சமூக சேவையில் ஈடுபட்டு வருகிறார்கள், அவரது ரசிகர்கள். ஏழை எளியோருக்கு உதவுவது, பள்ளிக் குழந்தைகளுக்குப் புத்தகம், கணினிப் போன்றவற்றை வழங்குவது போன்ற நற்பணிகளும் செய்கிறார்கள். ஹ்ருதயராகம் 2010 என்ற திட்டத்தின் தூதராக இருந்த அவர், எய்ட்ஸினால் பாதிக்கப்பட்டோருக்கு உதவுவதன் பொருட்டாக ஒரு அனாதை இல்லத்தை அமைத்தார். புற்றுநோயால் பாதிக்கப்பட்ட குழந்தைகளுக்கு நிவாரண நிதித் திரட்டி, சென்னை போரூரிலிருக்கும் ஸ்ரீ ராமச்சந்திரா பல்கலைக்கழகத்தில், செப்டம்பர் 2010ஆம் ஆண்டு வழங்கினார்.
விருதுகள்
  • சிறந்த நடிப்பிற்காக மூன்றாம்பிறை, நாயகன், இந்தியன் போன்ற படங்களுக்காக இந்திய அரசின் தேசிய விருதுகளைப் பெற்றார்.
  • சிறந்த குழந்தை நட்சத்திரத்துக்காக ‘இந்திய தேசிய விருது’ அவரது முதல் படமான ‘களத்தூர் கண்ணம்மாவிற்காக’ வழங்கப்பட்டது.
  • 18 முறை  ஃபிலிம்பேர் விருதுகள் பெற்ற பெருமை, கமல்ஹாசன் அவர்களையே சேரும்.
  • 1990ல், ‘பத்மசிறீ விருது’ பெற்றார்.
  • 2005ல், சத்யபாமா நிகர்நிலை பல்கலைக்கழகம் அவருக்கு ‘டாக்டர் பட்டம்’ வழங்கி கௌரவித்தது.
முக்கியமான திரைப்படங்கள்
கமல்ஹாசன் அவர்களின், திரையுலக வரலாற்றில் பெரிதும் பேசப்பட்டத் திரைப்படங்களுள் சில…
  • களத்தூர் கண்ணம்மா
  • 16 வயதினிலே
  • மூன்றாம் பிறை
  • நாயகன்
  • அபூர்வ சகோதரர்கள்
  • மைக்கேல் மதன காமராஜன்
  • குணா
  • மகாநதி
  • தேவர் மகன்
  • இந்தியன்
  • அவ்வை சண்முகி
  • ஆளவந்தான்
  • தெனாலி
  • தசாவதாரம்
(நன்றி:tamil.culturalindia.net)

திங்கள், நவம்பர் 03, 2014

இதையெல்லாம் சாப்பிடுங்க, நூறு வயசு வாழுங்க. !!

உடல் ஆரோக்கியத்தில் உணவு, உடற்பயிற்சி, ஓய்வு மற்றும் அமைதியான வாழ்க்கை முறை ஆகியவை முக்கியப் பங்காற்றுகின்றன. இருப்பினும் இதில் உணவுக்குச் சிறப்பிடம் உண்டு. சத்தான உணவை முறையாகச் சாப்பிட்டால் பல நோய்களைத் தவிர்க்கலாம்.
ரசாயன உரங்கள் இட்டு அதிக மகசூல் பெற்று வியாபார நோக்கத்தில் உருவாக்கப்படும் உணவுகள்,சுற்றுச் சூழல் மாசு. மன அழுத்தம், ஓய்வின்மை போன்றவற்றால் உடல் ஆரோக்கியம் பாதிக்கப்படுகிறது. நாமெல்லாம் நாக்கு ருசிக்கு அடிமையாகி உடல் ஆரோக்கியத்தில் அக்கறை காட்டுவதில்லை. வயிறும் நிரம்பிவிடும். ஆனால் உடலுக்குத் தேவையான எல்லாச் சத்துக்களும் கிடைக்கிறதா என்று நாம் யோசிப்பதே இல்லை

சமச்சீர் உணவு:
உடலும், மனமும் ஆராக்கியமாக இருக்க சத்தான - சமச்சீரான உணவு எடுத்துக் கொள்ள வேண்டும். உடலின் தேவையின் அடிப்படையில் ஊட்டச் சத்துகள் இரு வகையாகப் பிரிக்கப்பட்டுள்ளது. அவை பெரிய ஊட்டச்சத்துகள் (Macro nutrients),. சிறிய ஊட்டச்சத்துகள் (Micro Nutrients).
கார்போஹைட்ரேட் (மாவுச்சத்து), புரதம், கொழுப்பு ஆகியவை பெரிய ஊட்டச்சத்துகளாகும். பெரிய ஊட்டச் சத்துகள் உடலுக்கு அதிக அளவில் தேவைப்படுகிறது. உடல் இயக்கத்துக்கும் வளர்ச்சிக்கும் எரிசக்தியாக இவை செயல்படுகின்றன.
வைட்டமின் மற்றும் தாதுப்பொருள்கள் சிறிய ஊட்டச்சத்துகள் ஆகும். இவை உடலுக்குச் சிறிதளவே தேவை என்றாலும் உடல் இயக்கத்துக்கும் அதனை பாதுகாக்கவும் மிக மிகஅவசியமானது.
நமது உணவில் ஊட்டச்சத்துகள் அல்லாத பிற பொருள்களை வாசனை, ருசி, செரிமானத்துக்காகச் சேர்க்கிறோம். பூண்டு, சீரகம், வெந்தயம் போன்ற பொருள்கள் ஊட்டச்சத்துகள் ஆகாது. ஆனால் இப் பொருள்களில் வாசனை மட்டுமின்றி சில மருத்துவக் குணங்களும் உள்ளன.

புரத சத்து (Protein):
ஊட்டச்சத்துகளில் முதலாவது விளங்குவது புரத சத்து.இது உடல் வளர்ச்சிக்குத் தேவையானது. இதுஉடலில் நோய்த் தொற்றை எதிர்க்க உதவும். எதிர் உயிரிகளை உருவாக்கப் பயன்படும். ரத்தம், தசை நார்கள், திசுக்களை வலுப்படுத்தும்
பால், பாலாடைக் கட்டி,பருப்பு,பயறு வகைகள், வேர்கடலை, இறைச்சி, மீன், பேரீத்தம் பழம்,அத்திப்பழம்,திராட்சைப் பழம்,மாதுளம் பழம்,நேத்திரம் பழம் ,
வாதம் பருப்பு , எண்ணெய் வித்துக்கள், உணவுத் தானியங்கள், சோயாபீன்ஸ், முட்டை, கீரை வகைகளில் அதிகம் கிடைக்கிறது.முதல் தர புரத சத்து பாலில் தான் கிடைக்கிறது.
மாவுச்சத்து (Carbohydrate) மற்றும் கொழுப்புச் சத்து (Fat)உள்ள உணவுகள் உடலுக்கு சக்தி அளிக்கின்றன
 
மாவுச்சத்து (Carbohydrate)
அரிசி, கோதுமை, மக்காச் சோளம், கேப்பை, கம்பு, தினை உள்ளிட்ட தானிய வகைகள், சர்க்கரை, தேன், வெல்லம்,உருளைக் கிழங்கு, சர்க்கரைவள்ளிக் கிழங்கு, மரவள்ளிக் கிழங்கு ஆகியவற்றில் மாவுச்சத்து அதிகமாக உள்ளது.இது உடலுக்கு ஆற்றலை அளிக்கும்
 
கொழுப்புச் சத்து (Fat)
வெண்ணெய், நெய், முட்டையின் மஞ்சள் கரு, எண்ணெய் வித்துக்கள், மீன், ஈரல் போன்றவற்றில் கொழுப்புச் சத்து அதிகமாக உள்ளது. இது ஆற்றலை அளிக்கும். உயிர்ச் சத்துகள் கரைய உதவும்
 
வைட்டமின்கள் மற்றும் தாதுக்கள்:(Vitamins and Minerals):
வைட்டமின்கள், தாதுப் பொருள் அடங்கிய உணவுகள் உடலைப் பாதுகாத்து பராமரிக்கின்றன.
 
வைட்டமின் ஏ
பால், தயிர், வெண்ணெய், நெய், கேரட், பப்பாளி, கீரைகள், மஞ்சள் நிறக் காய்கள், மாம்பழம், மீன் எண்ணெய், ஈரல். ஆகியவற்றில் உள்ளது
மாலைக் கண் வராமல் தடுக்கும்.கண்களுக்கு நல்லது. உடல் செல்களைப் புதுப்பிக்கும். புற்றுநோய் வராமல் தடுக்கும். தோல் காக்கும். நோய் எதிர்ப்புச் சக்தி கிடைக்கும்.
 
வைட்டமின் ஏ1 (தயமின்):
பருப்புகள், பயறு வகைகள், முளை கட்டிய தானியங்கள், புழுங்கல் அரிசி, முட்டை, ஈரல் ஆகியவற்றில் உள்ளது. ஜீரணத்துக்கு உதவும். நன்கு பசி எடுக்கும். நரம்பு மண்டலம் வலுப்படும்.
 
வைட்டமின் ஏ2 ரிபோஃப்ளேவின்:
பால், வெண்ணெய் எடுக்கப்பட்ட பால், பாலாடைக் கட்டி, முழுத் தானிய வகைகள், பருப்பு வகைகள், கீரைகள், முட்டை ஆகியவற்றில் உள்ளது. வாய்ப் புண் வராது. தோலில் வெடிப்பு வராமல் தடுக்கும். பார்வை தெளிவாக இருக்கும்.
 
வைட்டமின் பி:
நரம்பு தொடர்பான நோய்கள், ரத்தக் குழாய் தொடர்பான நோய்கள், நாள்பட்ட காய்ச்சல் ஆகியவற்றைத் தடுக்கும் ஆற்றல் கொண்டது. உடல் நலிவு, எரிச்சல் அடையும் தன்மை, தூக்கமின்மை ஆகியவற்றைப் போக்க வல்லது.
 
வைட்டமின் சி:
கொய்யாப் பழம், நெல்லிக்காய், எலுமிச்சை, ஆரஞ்சு,திராட்சை, மாம்பழம், தக்காளி, முளை கட்டிய பயறுகள், வெங்காயம், கீரை வகைகள் உருளைக் கிழங்கு ஆகியவற்றில் உள்ளது
காயம் விரைவில் ஆற உதவும். எலும்பு முறிவுகள் விரைவில் குணமாகும். இயல்புக்கு மாறான எலும்பு வளர்ச்சியைத் தடுக்கிறது. நோய்த் தொற்றைத் தடுக்கும். ரத்த நாளங்களை வலுப்படுத்தும்.ரத்த அழுத்த அளவைக் குறைக்கும். இச் சத்து குறைந்தால் ஈறுகள் வீக்கம் அடைந்து ரத்தம் கசியும்.
 
வைட்டமின் டி :
சூரிய ஒளி, பால், முட்டையின் மஞ்சள் கரு, வெண்ணெய், நெய், பாலாடைக் கட்டி, மீன் எண்ணெய் ஆகியவற்றில் உள்ளது.
உடலில் சுண்ணாம்புச் சத்தை கிரகிக்கும். எலும்பு, பற்கள் வலுப்பட உதவும். குழந்தை பிறந்த பிறகு தினமும் சிறிது நேரம் வெயிலில் காண்பிப்பது எலும்புகள் வலுப்பட உதவும்.
 
வைட்டமின் இ :
கோதுமை, முளைதானிய வகைகள், எண்ணெய், பருத்திக் கொட்டைகள் ஆகியவற்றில் உள்ளது.
ரத்த சிவப்பு அணுக்களின் ஆயுளை அதிகரிக்கிறது. இனப் பெருக்கத்துக்கு உதவும்
 
வைட்டமின் கே :
முட்டைக் கோஸ், காலி ஃபிளவர், கீரை, கோதுமை, தவிடு, சோயாபீன்ஸ், முட்டையின் மஞ்சள் கரு ஆகியவற்றில் உள்ளது.
ரத்தம் உறைதலுக்கு இது அவசியம் தேவை. இச்சத்து இல்லேயேல் ரத்தப் போக்கு ஏற்படும்
 
வைட்டமின் நியாசின்:
மீன்.பருப்புகள், பயறுகள், முழு உணவுத் தானியங்கள், இறைச்சி, ஈரல் ஆகியவற்றில் உள்ளது.
வயிறு, குடல், தோல், நரம்பு மண்டலம் ஆகியவற்றின் ஆரோக்கியம் காக்கும்
 
கால்ஷியம் (சுண்ணாம்புச் சத்து):
பால், பால் பொருள்கள், கீரைகள், பீன்ஸ், முட்டை, பட்டாணி, பச்சைக் காய்கறிகள், மீன்,கேழ்வரகு ஆகியவற்றில் உள்ளது.
எலும்பு, பற்கள் வலுப்பட உதவும். நரம்புகள், வைட்டமின் டி-யை கிரகித்து தசைகள் இயல்பாகச் சுருங்கி விரிய உதவுவது கால்ஷியம் சத்து கொண்ட உணவுப் பொருள்களே. கர்ப்பிணிகள், முதியோருக்கு இச் சத்து மிகவும் அவசியம். ரத்த அழுத்தத்தைக் குறைத்தல், நரம்புகளின் செயல்பாட்டுக்கும் கால்ஷியம் உதவுகிறது.
 
இரும்புச் சத்து :
தேன்,சுண்டைக்காய், கீரைகள், முழுத் தானியங்கள், பேரீச்சை உள்ளிட்ட பழங்கள், வெல்லச் சர்க்கரை, புளி, முட்டை, ஈரல் ஆகியவற்றில் உள்ளது
புரதத்துடன் சேர்ந்து உயிர் அணுக்களுக்கு ஆக்சிஜன் கொடுக்கும். ரத்த சோகை ஏற்படாமல் தடுப்பதில் இரும்புச் சத்து பெரும் பங்கு வகிக்கிறது. ஹீமோகுளோபின் உற்பத்திக்கு இரும்புச் சத்து உறுதுணையாக இருந்து, ரத்தம் மூலம் ஆக்ஸிஜன் செல்வதற்கு உதவி செய்கிறது.
 
பாஸ்பரஸ்:
உடலில் கால்ஷியம் பாஸ்பேட்டாக கால்ஷியம் சேமிக்கப்படுகிறது. எலும்பு, பற்களில் இவ்வாறு அது சேமிக்கப்படுகிறது.
 
பொட்டாஷியம்:
உயர் ரத்த அழுத்தத்தைக் கட்டுப்படுத்தவும், பக்கவாதம் ஏற்படாமல் தடுக்கவும் பொட்டாஷியம் உதவுகிறது. சீரான இதயத் துடிப்பு, சிறுநீரகத்தில் கற்கள் உருவாகாமல் தடுத்தல் ஆகியவற்றுக்கும் பொட்டாஷியச் சத்து உதவுகிறது.
 
அயோடின் :
அயோடின் கலந்த உப்பை தினமும் தவறாமல் சேர்த்துக் கொள்ள வேண்டும். காய்கறிகளிலும் இச் சத்து உள்ளது.
குழந்தைகளின் முழுமையான வளர்ச்சிக்கு உதவும். இதன் குறைபாட்டால் முன் கழுத்துக் கழலை நோய் வரும். தைராய்டு சுரப்பிகள் சரிவர இயங்க இது தேவை
 
பிற சத்துக்கள்:
பீட்டா கேரடீன்-கீரைகள்.
இஸாபிளேவோன்ஸ்-சோயா
லைக்கோபீன்-தக்காளி
கர்க்குமின்-மஞ்சள் தூள்.
 
நார்ச்சத்து:
தானிய வகைகளில் காணப்படுகிறது.இது இரைப்பை-குடலின் இயல்பான செயல்தன்மைக்கு வழி வகுத்து மலச்சிக்கல் இல்லாமல் பார்த்துக்கொள்கிறது. மலக்குடல் புற்றுநோய் வராமல் தடுக்கிறது. ரத்த சர்க்கரை அளவைக் குறைத்து சர்க்கரை நோய் வராமல் தடுக்கிறது.
காய்கறிகளை இரும்புச் சத்து - நார்ச்சத்தைக் கொடுக்கக்கூடிய கீரை வகைகள், மாவுச் சத்தை அளிக்கக்கூடிய உருளை - சர்க்கரைவள்ளி உள்ளிட்ட கிழங்கு வகைகள், நார்ச் சத்தை அளிக்கக்கூடிய பீன்ஸ், முட்டைக்கோஸ் எனப் பிரித்துக் கொள்ளலாம். எனவே எந்தக் காயையும் உணவில் ஒதுக்கக்கூடாது.
வெண்ணெய், நெய், டால்டா, தாவர எண்ணெய்களிலிருந்து கொழுப்புச் சத்து மட்டுமின்றி ஃபோலிக் அமிலம், வைட்டமின் இ சத்தும் கிடைக்கிறது.
 
ஆன்ட்டி ஆக்சிடென்ட்:
நம் உடலில் சத்துகள் உறிஞ்சப்பட்டு உயிர் வேதியியல் மாற்றங்கள் நடக்கும் போது ‘‘free radicals’’ என்பவை உடலில் சேருகின்றன. இதை Oxidative Stress என்கிறோம். இந்த ப்ரீ ரேடிகல்ஸ் சர்க்கரை நோய், இதய நோய், கண் புரை, புற்று நோய் போன்ற நிலைகளில் அதிகம் காணப்படுகிறது. இதனை கட்டுப்படுத்த ஆன்டி ஆக்ஸிடன்ட் நிறைந்த உணவு வகைகளைச் சாப்பிடுவது அவசியம். பச்சைக் காய்கறிகள், பழங்களில் ஆன்ட்டி ஆக்ஸிடென்ட் அதிகமாக உள்ளது.
 
நீர் சத்து:
நீர்ச் சத்தை அளிக்கக்கூடிய குடிநீர், இளநீர், மோர் ஆகியவற்றையும் மறந்து விடாதீர்கள். நன்கு காய்ச்சி வடிகட்டப்பட்ட குடிநீரும் உடலுக்குத் தேவை. அதாவது நாள் ஒன்றுக்குக் குறைந்தபட்சம் 3 லிட்டர் (8 முதல் 10 டம்ளர்) தண்ணீர் தேவை.

யாருக்கு என்ன சாப்பிடலாம்?
பொதுவாக இந்தியர்களுக்குக் கூடுதலாகத் தேவைப்படும் சத்துகள்:
1. வைட்டமின் பி காம்ப்ளக்ஸ்
2. ஆன்டிஆக்ஸிடெண்ட் வைட்டமின்கள் - வைட்டமின் சி, இ, மற்றும் பீட்டாகரோட்டின்.
3. ஆன்டிஆக்ஸிடெண்ட் தாதுக்கள் - துத்தநாகம், செலினியம்.
4. இரும்பு, கால்ஷியம்.
5. இபிடி, டிஎச்ஏ, ஜிஎல்ஏ போன்ற முக்கிய ஃபேட்டி அமிலங்கள்.
6. நோய் எதிர்ப்பு ஆற்றலை அதிகரிக்கும் சத்துகள்.
அசைவ உணவில் தாவரங்களில் இருந்து கிடைக்கும் கரோட்டின் சத்துகள் முழுமையாகக் கிடைப்பதில்லை.சைவ உணவிலும் முழுமையாகச் சத்துக்கள் கி்டைப்பதில்லை. முக்கியமான ஃபேட்டி அமிலங்கள் மீனிலிருந்துதான் கிடைக்கின்றன. எனவே இரு வகை உணவையும் கலந்து உண்பது தான் எல்லா சத்துக்களையும் பெறும் வழி.
முதல் தர புரதத்துடன் அனைத்து விதமான ஊட்டசத்தும் பாலில் உள்ளதால், குழந்தைகள்,இளம் பருவத்தினர் யாவரும் பால் சாப்பிடுவது மிக முக்கியம். குறிப்பாக இரவு தூங்கச் செல்லும் முன் ஒரு கோப்பை பால் அருந்துவது நல்லது. குழந்தை பிறந்து ஓர் ஆண்டு வரை பால் கொடுப்பது நல்லது.அதிலும் குழந்தை பிறந்த உடன் சீம்பால் கொடுக்கத் தவறக் கூடாது. மிகுந்த அளவு நோயெதிர்ப்பு சக்தி சீம்பாலில் உள்ளது. உடல் பருமன், சர்கரை நோயுள்ளவர்கள் சர்க்கரை இல்லாமல் ஆடை நீக்கிய பாலை அருந்தலாம். சிறுநீரக பாதிப்பு உள்ளவர்கள் மருத்துவர் ஆலோசனைப்படி பால் சாப்பிடலாம்.
தினமும் ஏதாவது ஒரு வேளை அந்தந்த சீசனுக்கு ஏற்ற பழத்தைச் சிறிது அளவாவது சாப்பிடுங்கள். நோய் பிரச்னை ஏதும் இல்லாதவர்கள் தினமும் வாழைப்பழம் சாப்பிடலாம். ஏனெனில் நார்ச்சத்து, தாதுச் சத்து, வைட்டமின்கள் என நோய் எதிர்ப்புச் சக்தியை உள்ளடக்கிய இயற்கை "டானிக்' பழங்கள்தான். வாழைப்பழம், பப்பாளி, ஆரஞ்சு, மாம்பழம், திராட்சை ஆகியவை நல்லது. பச்சைக் காய்கறிகளில்,பழங்களில் தாதுச் சத்துகளும் வைட்டமின்களும் உள்ளன.
வெள்ளைப் பூண்டு இதய நோய் வராமல் தடுக்கவும், வாழைத்தண்டு சிறுநீரக நோய் வராமல் தடுக்கவும், முருங்கைக் கீரை உயர் ரத்த அழுத்த நோயைக் கட்டுப்படுத்தவும், வெந்தயம், ஓட்ஸ் போன்றவை ரத்த சர்க்கரை அளவைக் குறைக்கவும் உதவுகின்றன.

தினசரி உணவு
உடலுக்குத் தேவையான எல்லா சத்துக்களும் தேவையான விகிதத்தில் கிடைக்கும் வகையில் நமதுஅன்றாட சாப்பாடு அமைய வேண்டும்.
 
காலை உணவு:
காலை எழுந்தவுடன் பால் குடிப்பது மிகவும் நல்லது. பொதுவாக தென்னிந்தியர்களின் பழக்கத்துக்கு ஏற்ப காலையில் இட்லி, தோசை, உப்புமா, கிச்சடி இப்படி ஏதாவது ஒன்றைச் சாப்பிடுகிறோம். உடல் வளர்ச்சிக்குப் புரதச்சத்து மிக அவசியம். எனவே காலை உணவில் புரதச் சத்து அதிகம் உள்ள பருப்பு வகைகளைச் சேர்த்துக்கொள்ளவேண்டும். இட்லிக்கு, சட்னியுடன் சாம்பாரும் சேர்க்கப் படவேண்டும், ஏதாவது ஒன்று மட்டும் போதாது. சாம்பாரில் புரதச் சத்து கிடைக்கும். சட்னியைப் பொருத்தவரை புதினா, கொத்துமல்லி, கருவேப்பிலை, தக்காளி சட்னிகளில் வைட்டமின் சத்து கிடைக்கும்.சாம்பாரில் பருப்பு இருப்பதோடு காய்கறிகளும் சேர்க்கப்பட்டால் இன்னும் நல்லது. இட்லி, பொங்கல், தோசை போன்வற்றில் ஏற்கெனவே பருப்பு சேர்க்கப்பட்டாலும் சம்பாரும் அவசியம். சப்பாத்திக்கு "டால்' சேர்த்துக் கொள்ளலாம். ரொட்டி என்றால் வெறும் ரொட்டி மட்டும் சாப்பிடாமல் காய்களைத் துண்டுகளாக ("சான்ட்விச்' ) வெட்டிச் சேர்த்துச் சாப்பிடவேண்டும்.

காலை 11 மணி: மோர் அல்லது இளநீர் சாப்பிடலாம். காய்கள் கலந்து சூப் அல்லது பழச் சாறு இதில் ஏதாவது ஒன்று குடிக்கலாம். ஆனால் கண்டிப்பாக காபி, டீ சாப்பிடக் கூடாது.

மதிய உணவு: மதிய உணவும் ஊட்டச் சத்து நிறைந்ததாக இருப்பது நல்லது. சாதம், காய்கறிகள் கலந்த சாம்பார், பொரியல், தயிர் ஆகியவையே சரிசமவிகித ஊட்டச் சத்தைக் கொடுக்கும். வற்றல் குழம்பு என்றால் பருப்பு சேர்க்கப்பட்ட கூட்டு அவசியம். ஏனெனில் சாம்பாருக்குப் பதிலாக கூட்டில் பருப்பு, காய்கறிகள் சேர்க்கப்படுவதால் வற்றல் குழம்புக்குக் கூட்டு அவசியம். தயிர் கண்டிப்பாக இருக்கவேண்டும்.
சிப்ஸ், வடாம், அப்பளம் வேண்டாம்: இதனால்உடலுக்கு எந்த நன்மையும் இல்லை. மதிய உணவில் மேற்சொன்ன காய் பொரியலுடன் வேண்டுமானால் அப்பளம் தொட்டுக் கொள்ளலாம். ஆனால் காய்களுக்குப் பதிலாக அப்பளம், வடாம், சிப்ஸ் போன்றவற்றை மட்டுமே தொட்டுக் கொண்டு சாப்பிடுவது எவ்விதப் பலனையும் தராது. ரசத்தில் போதிய ஊட்டச்சத்துகள் கிடையாது. எனவே பருப்பு துவையல் வைத்துக்கொள்ளலாம். அதோடு காய்கறிகளை (கேரட், வெள்ளிக்காய், வெங்காயம்) பச்சையாக நறுக்கிச் சாப்பிடலாம்.

தேநீர் நேரம்: தேநீர் நேரத்தில் (மாலை 4 மணி முதல் 5-க்குள்) தேநீருடன் ஏதாவது சுண்டல், வேர்க்கடலை, முளைகட்டிய பயறு சாப்பிடலாம். முடிந்தால் அந்தந்த சீசனில் மலிவாகக் கிடைக்கும் ஏதாவது ஒரு பழம் சாப்பிடுவதும் நல்லது. எண்ணெய்யில் தயாரிக்கப்பட்ட பஜ்ஜி, போண்டா போன்றவற்றை முடிந்தளவு தவிர்ப்பது நல்லது.

இரவு உணவு: இரவு உணவு மதியச் சாப்பாடு போல இருக்கலாம் அல்லது டிபன் சாப்பிடலாம். இரவு சாப்பாத்தி சாப்பிடுவதில் தவறில்லை. ஆனால் சப்பாத்திக்குத் தொட்டுக்கொள்ள பருப்பு கலந்த கூட்டு அவசியம். எல்லாச் சத்துகளும் அடங்கிய உணவை என்றோ ஒரு நாள் மட்டும் சாப்பிட்டால் போதாது. தினமும் சமவிகித ஊட்டச் சத்து அடங்கிய உணவில் அக்கறை செலுத்தவேண்டும். அவரவர் வசதிக்கு ஏற்ப கிடைக்கும் உணவு வகையைச் சாப்பிடலாம்.

ரத்த சோகை உள்ளவர்கள் என்ன சாப்பிடலாம்?:
இன்று சிறு குழந்தைகள், கர்ப்பிணிப் பெண்கள், பாலூட்டும் தாய்மார்களிடம் ரத்த சோகை 60 முதல் 78 சதவீதம் வரை காணப்படுகிறது. கர்ப்ப காலத்தில் ரத்த சோகை ஏற்பட்டால் கருக் கலைந்து விடுதல், போதிய வளர்ச்சி இல்லாத சிறு குழந்தை, குறைப் பிரசவம், நஞ்சுக்கொடி இடம் மாறியிருத்தல், பிரசவத்தின் போது தாய் இறத்தல், குறிப்பிட்ட நாளுக்கு முன்பே பொய்யாக பிரசவ வலி ஆகிய விளைவுகள் ஏற்படும்.மேலும் கருவில் வளரும் குழந்தையின் முதுகு எலும்பு வளர்ச்சிக்கும் நச்சுக் கொடி உருவாவதற்கும் ஃபோலிக் அமிலச் சத்து (இரும்புச் சத்து) அவசியம்.
ரத்த சோகை ஏற்படாமல் தடுத்துக் கொள்ள இரும்புச் சத்து நிறைந்த உணவு வகைகளை சாப்பிட வேண்டும். அவல், அருகம்புல் சாறு, வெல்லம், பேரீச்சம் பழம் போன்றவற்றை எடுத்துக் கொள்ளலாம்.கர்ப்பம் தரித்த உடனேயே காபி, டீ குடிப்பதை கர்ப்பிணிகள் நிறுத்திவிட வேண்டும். ஏனெனில் உணவில் இருக்கும் இரும்புச் சத்தை கிரகிக்க முடியாமல் காபி - டீ-யும் தடுத்து விடுகின்றன. பால் குடியுங்கள்.

மிக முக்கியமான உறுப்பான மூளைக்கும் ரத்த ஓட்டம் இருந்தால்தான் செயலாற்ற முடியும். மூளை இருப்பது முக்கியமல்ல, அதை உபயோகிப்பதுதான் முக்கியம் என்பது தெரிந்தாலும், சரியான முறையில் சிந்தனையைச் செலுத்துவதும் ஆரோக்கியத்துக்கு உறுதுணையாக இருக்கும். நல்லதையே நினைத்து, நம்பிக்கையை வளர்த்துக் கொள்பவன் நல்ல ஆரோக்கியத்துடன் இருப்பான் என்பதில் சந்தேகமில்லை.

படபடப்பு, எரிச்சல், சோர்வு, ஏமாற்றம் - இவையெல்லாம் வாழ்க்கையின் தத்துவத்தை நாம் உணர்ந்து கொள்ளாததால் நிகழும் கேடு. ஆசையை தவிர்த்தால் நாமே கேட்டு வாங்கும் பல துன்பங்கள் வராது.தூக்கமின்மை, ரத்த அழுத்தம், இதயக் கோளாறு, மூட்டு வலி, தோல் நோய் சில வகையான புற்று நோய், சிறுநீரகக் கோளாறு, ஆஸ்துமா, பால்வினை நோய்களுக்கு ஆசைதான் வித்து என்பதை மறந்து விடாதீர்கள்.
நன்றி:suvanampoga.blogspot.com

வெற்றிக்கா​ன 14 மந்திரங்கள்​

மந்திரங்கள் சில நேரங்களில் தந்திரங்களாக இருப்பது அனைவருக்கும் தெரிந்ததே. ஆனால் புத்தமதம் மற்றும் இந்து மதத்தினை சேர்ந்தவர்கள் தியானம் போன்ற செயல்களில் ஈடுபடும் போது மந்திரம் போன்ற சில வார்த்தைகளை உச்சரிப்பதை அநேக இடங்களில் பார்த்திருக்கிறோம். இது ஆன்மீக ரீதியாகவோ அல்லது விஞ்ஞான ரீதியாகவோ அணுகுவோருக்கு வெவ்வேறு பார்வையில் தோன்றும். தியானம் செய்யும் போது இவர்கள் உச்சரிக்கும் வார்த்தைகள் பார்ப்பவர்களின் மனதிற்கு மந்திரங்களாகத் தோன்றுகின்றன. உண்மையில் இவர்கள் ஏன் இப்படி செய்கிறார்கள் என்று பலமுறை நினைத்ததுண்டு. அதன் காரணம் என்னவென்றால் அவர்கள் தங்களது தியானத்தில் கவனம் செலுத்த ஏதாவது ஒன்றை கூறிக்கொண்டே இருக்க வேண்டும் அவ்வளவுதான். இப்படி ஒவ்வொருவரும் ஒவ்வொரு மாதிரியான மந்திரங்களை பயன்படுத்துவதுண்டு. இதேபோல்தான் நாமும், நாம் நினைத்த காரியத்தில் நமது கவனத்தினை வைக்க 14 மந்திரங்கள் உள்ளது. அவை கீழே தொகுக்கப்பட்டுள்ளன.

1. பொறுமையே வெற்றிக்கான வழி
இந்த மந்திரத்தினை புரியும்படி சொன்னால் “ஒரே நாளில் ஒபாமா” ஆக முடியாது என்பதுதான். வெற்றி ஒரே நாளில் கிடைத்திடாது, அதற்கு முக்கியமாக பொறுமை, விடாமுயற்சி, கடின உழைப்பு என்ற மூன்றும் அவசியம். இத்துடன் அனுபவமும் ஒன்று சேர்ந்துவிட்டால் வெற்றி கிடைப்பதை எவராலும் தடுக்க முடியாது. நாம் திட்டமிட்டபடி நமது திட்டம் நடைபெறாதபோது கோபம், எரிச்சல் போன்ற தேவையில்லாத எண்ணங்கள் வரும், ஆனால் அதையெல்லாம் தாண்டி பொறுமையுடன் இருந்தால் மட்டுமே வெற்றிக்கனியினை ருசிக்க முடியும்.

2. காற்றுள்ளபோதே தூற்றிக்கொள்

வாய்ப்புகள் எப்போதாவதுதான் கிடைக்கும், அப்போது நாம் அதை பயன்படுத்தாவிட்டால் அந்த வாய்ப்பை நழுவவிட்டதை எண்ணி வாழ்நாள் முழுவதும் கஷ்டப்பட வேண்டியிருக்கும். வாய்ப்பு சரியாக அமைந்தது என்றால் எவ்வளவு பெரிய ஆபத்தாக இருந்தாலும் முயற்சி செய்யுங்கள்.
3. முன்னோக்கி முன்னேறுங்கள்
ஏற்கனவே செய்த தவறுகளை எண்ணி வருத்தப்பட்டுக் கொண்டிருந்தால் அடுத்தநிலைக்கு ஒருநாளும் செல்ல முடியாது. வாழ்க்கையில் ஒரு உச்சநிலைக்கு வரும்வரை நடந்தது என்னவென்று பின்னோக்கி பார்க்கக்கூடாது, எத்தனை தோல்விகள் வந்தாலும் தொடர்ந்து முன்னேறிக் கொண்டே இருக்க வேண்டும். தோல்வியில் இருந்து பாடம் கற்காவிட்டால் அதுதான் உண்மையான தோல்வி, அதனால் தோல்வியை வெற்றிக்கு படிக்கல்லாக்கி அடுத்த நிலைக்கு தொடர்ந்து முன்னேறிக் கொண்டே இருங்கள்.
4. உங்களை விட்டுக்கொடுக்காதீர்கள்!
வாழ்க்கை எளிது என்று எவருமே, ஒருநாளும் கூறியதில்லை. வெற்றியாளர்கள் ஒருநாளும் தங்களை தங்கள் பாதையிலிருந்து விலக்கிக்கொண்டதில்லை. தோல்விகளிடம் ஒருபோதும் உங்களை விட்டுக்கொடுக்காதீர்கள்!

5. என்னால் முடியும்….

மற்றவர்கள் உங்களைப் பார்த்து “உங்களால் முடியும், நீங்கள் செய்தால் நன்றாக இருக்கும்” என்று கூறும் முன்னரே நீங்களாகவே முன்வந்து  அந்தச் செயலினை செய்யத் தொடங்க வேண்டும். ஒவ்வொரு முறை உங்கள் திறமையினைப் பற்றிய சந்தேகம் உங்களுக்கு வரும்போதும் “என்னால் முடியும்” என்ற மந்திரம் கண்டிப்பாக உதவும்.

6. யானையின் பலம் தும்பிக்கை, மனிதனின் பலம் நம்பிக்கை

உலகில் பல புத்திசாலிகள் இருக்கின்றனர். ஆனால் அனைவராலும் தலைவராக முடிவதில்லை. ஏனெனில் அவர்களின் மீது அவர்களுக்கே நம்பிக்கை வருவதில்லை. “என்னால் இந்த செயலை முன்னின்று நடத்த முடியும்” என்ற நம்பிக்கை எப்போது வருகிறதோ அப்போது நாம் இந்த மந்திரத்தில் கைதேர்ந்தவராகிறோம்.

7. உழைப்பில்லையேல் ஊதியமில்லை!

நமது அனைத்து திறமைகளையும் நமது மனதுக்குள்ளே வைத்துக்கொண்டால் வெளியுலகிற்கு எப்படித் தெரியும். அதை வெளிக்கொணர நம்மிடம் இருக்கும் மந்திரம் தான் “உழைப்பு”. உழைத்தால் மட்டுமே நமது கனவினை நனவாக்க முடியும்.
வெற்றிக்கான மந்திரங்கள்!!!

8. கவலை ஏதுமில்லை….

நமது ஒவ்வொரு முயற்சிக்கும் தடையாக இருப்பது நமது பயம், கூச்சம் மற்றும் கவலைகள் தான். இவை மட்டும் நமக்கு இருந்தால் நமது எதிரிகள் தனியாக செய்வினை வைக்க வேண்டாம், ஏனென்றால் இவை இருக்கும்வரை நம்மால் முன்னேறவே முடியாது. அதற்கான மந்திரம் தான் இது “கவலை ஏதுமில்லை, தொல்லை இல்லை”. நடக்கும் செயல்களை மகிழ்ச்சியாக ஏற்றுக்கொள்ளும்போது நமது கவலைகள் கடன்வாங்கியாவது அடுத்த நாட்டிற்குச் சென்றுவிடும்.

9. சக்திகள் அதிகரிக்கும்போது, பொறுப்புகளும் அதிகரிக்கும்.

இது நீங்கள் அடிக்கடி பார்த்து வியந்த “ஸ்பைடர்மேன்” படத்தில் இருந்து வந்தது. நமக்கு என்ன திறமை என்பது நாம் மட்டும் அறிந்த ஒன்று, அதை நாம் பயன்படுத்தினால்தான் சிறப்புற செயலாற்ற முடியும். உங்கள் திறமையின் மீது நம்பிக்கை வைத்து அதை செயல்படுத்துங்கள் கண்டிப்பாக வெற்றி கிடைக்கும்.

10.  இறுதியில் எல்லாம் சரியாகிவிடும்….

நமது வெற்றிக்கான பாதை எப்போதும் சமமாக இருக்கும் என சொல்ல முடியாது. மேடு பள்ளங்களுடன் தான் இருக்கும். அதை சகித்துக்கொள்ளும் மனப்பக்குவமும், சுயக்கட்டுப்பாடும் நமக்கு வேண்டும். இறுதியில் எல்லாம் சரியாகிவிடும் என்ற எண்ணம் இருந்தால் கடைசிவரை வெற்றி நம் கையில்.

11. முடியாதது ஒன்றுமில்லை

இன்று வெற்றியாளர்களாக நாம் பார்க்கும் பலர் ஒரு நாள் அவர்கள் இப்போதிருக்கும் உயரத்தினை கனவாகக் கண்டவர்களாகத்தான் இருப்பார்கள். உங்கள் கனவினை நீங்கள் நிறைவேற்றாவிட்டால் யார் நிறைவேற்றுவார் என்ற எண்ணம் மனதிற்குள் இருக்கவேண்டும். அப்போதுதான் ‘நம்மால் முடியாது’ என்ற எண்ணமே வராது.

12. உங்களால் மற்றவர்களை மாற்ற முடியாது. உங்களால் உங்களை   மட்டுமே மாற்ற முடியும்.

இந்த உலகத்தில் உங்களால் மாற்றக்கூடிய ஒரே உயிர் நீங்கள் மட்டுமே அதனால் உங்களை நீங்களே கட்டுப்படுத்த கற்றுக்கொள்ள வேண்டும். அதனால் இந்த மந்திரத்தினை ஞாபகம் வைத்துக்கொள்ளுங்கள்.

13. விழி எழு பற ….

வாழ்க்கையில் ஏதாவது ஒரு இலக்கு நமக்கு கண்டிப்பாக வேண்டும். அந்த இலக்கினை அடைவதற்கு தொடர்ந்து மூச்சுக்காற்று போல முயற்சி செய்ய வேண்டும். அப்போதுதான் அதை சாதிக்க முடியும்.

14. சிறந்ததையே செய்யுங்கள்

ஒரு ஆசிரியர் மாணவர்களிடம், தேர்ச்சி அடைந்தால் மட்டும் போதும் என்று கூறுவதில்லை. அனைவரும் 100% மதிப்பெண் எடுக்க வேண்டும் என்றுதான் கூறுவார். அதைப் போலத்தான் இதுவே போதும் என்ற எண்ணம் வந்துவிட்டால் நம்மால் எவ்வளவு முடியும் என்பது நமக்கே தெரியாமல் போய்விடும். அதனால் எப்போதும் உங்களால் முடிந்தவரை சிறப்பாகச் செயல்படுங்கள்.
இதில் ஒரு சில மந்திரங்களை கடைபிடிக்கத் தவறினாலும், இவற்றை கடைபிடிக்கும் முயற்சியில் ஈடுபட்டாலே விரைவில் வெற்றி கிடைத்துவிடும்.
நன்றி:
தமிழ் இன்போஃ