வெள்ளி, நவம்பர் 29, 2013

குறள் காட்டும் பாதை

இன்றைய குறள்
அதிகாரம் 93 கள் உண்ணாமை 

களித்துஅறியேன் என்பது கைவிடுக; நெஞ்சத்து 
ஒளித்ததூஉம் ஆங்கே மிகும். (928)

பொருள்: யாருக்கும் தெரியாமல் மது அருந்துபவன் "நான் ஒருபோதும் மது அருந்தியதில்லை" என்று சொல்வதை விட்டு விட வேண்டும். ஏனெனில் அவன் மது அருந்திய நிலையில் அடுத்தவர்களுக்கு அவனது 'குற்றம்' வெளிப்பட்டு விடும்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக