திங்கள், அக்டோபர் 29, 2012

உடலினை உறுதி செய்!


தாதுப் பொருட்கள் (Minerals)
உணவில் காணப்படும் தாது உப்புகள் உடலில் பல இன்றியமையாத பணிகளைச் செய்கின்றன. தாதுப் பொருட்களாவன :
அ. கால்சியம் ஆ. துத்தநாகம் இ. இரும்பு ஈ. பொட்டாசியம் உ. மெக்னீசியம் ஊ. சோடியம்
வைட்டமின்களைப் போலவே தாதுப் பொருட்களையும் உடல் உறுப்புகள் தயாரித்து விட முடியாது. எனவே, இவற்றையும் உண்ணும் உணவு மூலமாகத்தான் உடல் பெறவேண்டும். இவை அடங்கிய உணவுகளாவன:
அ. பால் ஆ. பாலாடைக்கட்டி இ. மாமிசம் ஈ. முட்டை உ. கடலை ஊ. பீன்ஸ் எ. விதைகள்
ஏ. எலுமிச்சை ஐ. ஆப்பிள் ஒ. வாழைப்பழம் ஓ. உருளைக்கிழங்கு
ஆரோக்கியமான உணவு – அதாவது முழு தானிய அரிசி மற்றும் கோதுமை, பழ வகைகள் மற்றும் காய்கறிகள் – உண்ணும்போது உடலுக்குத் தேவையான வைட்டமின்களும் மினரல்களும் கிடைத்து விடுகின்றன. வைட்ட மின்கள் அல்லது மினரல்கள் தினமும் தேவைப் படுவதாலும் இதனை உடல் தானாக தயாரித்துக் கொள்ளாது என்பதாலும் இவை அடங்கிய உணவை தினமும் உண்ணுதல் அவசியமாகிறது. மேற்சொன்ன உணவு வகைகளை வழக்கமாக உண்ணாதவர்கள் மருத்துவரின் ஆலோ சனையைக் கேட்டு வைட்டமின் மாத்திரையைச் சாப்பிடுவது அவசியமாகிறது.
உப்பு (Salt)
நாம் அன்றாடம் உண்ணும் ஒரு தாதுப் பொருள் உப்பு. இது சோடியம் குளோரைடு என்னும் வேதிப் பொருளாகும். ஒரு மனிதனுக்கு நாள் ஒன்றுக்கு 6 கிராம் உப்பு (2 கிராம் சோடியம்) போதுமானது. ஆனால், நாம் நமது தேவைக்கு அதிகமாகவே தினமும் உப்பு சாப்பிட்டு வருகிறோம். இது ஒரு பழக்கமாகி விட்டதால் உப்பின் சுவை நமக்கு மிகவும் பிடித்து விட்டது. அதிக உப்பு உடலில் பல ஆபத்துகளை விளைவிக்கும். உடலில் இரத்த அழுத்தத்தை அதிகப்படுத்துவதுடன் உடலில் உள்ள தண்ணீரை வெளியேற அனுமதிக்காமல் தேக்கி விடும். தொடர்ந்து இந்நிலை நீடித்தால் நச்சுப் பொருட்கள் வெளியேறாமல் உடலில் தேங்கி விடும். இதனால் உடல் நலம் கெட்டுவிடுகிறது.
நாம் உண்ணும் பல வகை உணவுகளில் தேவைக்கு அதிகமாகவே உப்பு உள்ளது. மீன், மாமிசம், ஆகியவற்றைச் சமைக்க அதிக உப்புச் சேர்க்கப்படுகிறது. எண்ணையில் பொரித்த சிப்ஸ் போன்ற உணவில் அதிகமாக உப்பு உள்ளது. நாம் விரும்பி உண்ணும் ஊறுகாயில் கூட அதிகப்படியான உப்பு உள்ளது. ஆக, நாம் தேவைக்கதிகமான உப்பினை அன்றாடம் உட்கொள்கிறோம் என்பது மட்டும் உறுதி யாகிறது.
உடலில் தேவைக் கதிகமாக உப்பு சேர விடாமல் தடுக்க ஊறு காய் சாப்பிடுவதை முற்றிலும் தவிர்த்து விடுவது நல்லது. சாப்பிட்டுத்தான் ஆக வேண்டும் என்றால் மிக குறைந்த அளவுடன் நிறுத்திக் கொள்ள வேண்டும். அதே போல எண்ணெயில் பொரித்த சிப்ஸ் போன்ற உணவு வகைகளையும் சாப்பிடுவதால் உப்பின் அடர்த்தி குறைக்கப்பட்டு பொட்டா சியம் என்ற தாதுப்பொருளின் கிரகிப்பு அதிகப்படுத்தப்படுகிறது. இது உடல் நலத்திற்கு மிகவும் நல்லது. சுருங்கச் சொன்னால், உடல்நலம் காக்க உப்பின் அளவைப் பெருவாரியாக குறைத்துக் கொள்ள வேண்டும்.
தண்ணீர் (Water)
முழு உடல்நலத்திற்கு என்னென்ன உணவு வகைகள் எவ்வளவு சாப்பிட வேண்டும் என்பதைப் பற்றித் தெரிந்து கொண்டோம். இதுவரை நாம் சிந்திக்காத ஒரு வகை உணவு இருக்கிறது. அது திரவ உணவு. அதுதான் தண்ணீர். தண்ணீரும் ஓர் உணவே.
‘நீரின்றி அமையாது உலகு’ என்றார் திருவள்ளுவர்.
நீரால் ஆனது இவ்வுலகம். நீரால் ஆனவை உயிரினங்கள். நாம் வாழும் பூமிகூட 72 சதவீதம் தண்ணீரைக் கொண்டதுதான். மனித உடல் மற்றும் தாவர உடல் கூட 80 சதவீதம் நீரால் ஆனது எனும்போது நீர் எவ்வளவு முக்கியமானது மேலும் 

1 கருத்து:

திண்டுக்கல் தனபாலன் சொன்னது…

நல்லதொரு பகிர்வு... இன்னும் நிறைய எழுதவும்...

நன்றி...

கருத்துரையிடுக