திங்கள், செப்டம்பர் 10, 2012

சீஸ்ரீதிரு அரங்கத்தின் ஒரு மாலை நேரம்


Imageபயணத் திட்டப்படி இப்போ நாம இருக்குறது ஸ்ரீரங்கம். அங்க நடந்ததைச் சொல்றதுக்கு முன்னாடி ஸ்ரீரங்கம் என்னும் பேரைப் பத்திக் கொஞ்சம் பாக்கலாமே.
சீரங்கமா? ஸ்ரீரங்கமா? அரங்கமா? திருவரங்கமா? எது சரி? எது தவறு? இந்த விவாதம் இலக்கியவாதிகளுக்கு அல்வா சாப்பிடுறது மாதிரி.
இதப் பத்தி நெறைய விவாதங்களும் சண்டைகளும் ஏற்கனவே நடந்திருக்கு. இன்னைக்கு அந்த ஊரோட பேர் ஸ்ரீரங்கம். பஸ்ல கூட ஸ்ரீரங்கம்னுதான் எழுதியிருக்கு. எல்லாப் பெயர்ப்பலகைகள்ளயும் ஸ்ரீரங்கமே தான்.
ஆனா எனக்குத் தெரிஞ்சு எந்த வைணவ ஆழ்வாரும் ஸ்ரீரங்கம்னு பாடலை. அரங்கம்/திருவரங்கம் தான்.
அதுக்குக் காரணம் இருக்கு. ரங்கன் என்னும் பேரைத் தமிழ் இலக்கணப்படி அரங்கன்னு எழுதுறதால ஸ்ரீரங்கம் என்னும் ஊர் அரங்கம்னு அழைக்கப்படலை.
அரங்கம் என்னும் தமிழ்ச் சொல்லுக்குப் பெரிய பொருள் உண்டு. பொதுவாக பழைய தமிழில் இறைவன் இருப்பிடங்களைச் சொல்லும் போது கோட்டம், அம்பலம், அரங்கம் என்றுதான் பெயர்கள் இருக்கும். இந்த இடங்கள் பொதுவான இடங்கள்.
அம்பலத்தில் ஆண்டவன் ஆடுகின்றான் என்றால் என்ன பொருள்? எல்லாருக்கும் பொதுவானது அந்த ஆட்டம். அது போலத்தான் அரங்கம். எல்லாருக்கும் பொதுவானதொரு அரங்கத்தில் இறைவனாகப் பட்டவன் இருக்கிறான்.
அரங்கத்தில் பள்ளி கொண்டிருப்பதால் அரங்கன். இதில் இன்னொரு விவரமும் இருக்கிறது. அரங்கம் என்பது என்ன? மேடை/மேடு. அந்த மேட்டில் நடக்கும் கூத்து எல்லாருக்கும் பார்க்க ஏதுவாகிறது. காவிரியாற்றுக்கு நடுவில் ஒரு மேட்டில்தான் அரங்கன் பள்ளி கொண்டிருக்கிறான்.
இப்படி உண்டான அரங்கம் என்னும் பெயரோடு சிறப்பு சேர்க்க திருவரங்கம் என்று அழைத்தும் ஆழ்வார்கள் பாடியுள்ளார்கள். அவர்களின் பாசுரங்களில் அரங்கனே என்றுதான் அச்சுதனையும் அழைத்திருக்கிறார்கள்.
ஸ்ரீ என்னும் எழுத்தைத் திரு என்று தமிழில் மாற்றுகின்றார்கள் என்றும் சொல்வார்கள். ஆனால் இங்கு ஆழ்வார் சொன்ன திருவரங்கத்தில் திரு என்ற சிறப்புப் பெயர் ஸ்ரீ என்று மாற்றப்பட்டு இன்று ஸ்ரீரங்கம் என்று அழைக்கப்படுகிறது. அரங்கனின் பெயரின் முதலெழுத்தான அகரமும் போச்சு. தாமோதரனை மோதரன் என்று அழைப்பது போல அழைத்துக் கொண்டிருக்கிறோம். கோயிலுக்குள்ளும் ரங்கா ரங்கா என்று எழுதி வைத்திருக்கிறார்கள். ம்ம்ம்ம்.
பொதுவில் யாரும் எப்படியும் அழைக்கலாம். ஆனால் ஆழ்வார்களையும் அவர்களது பாசுரங்களையும் மதித்து மகிழ்ந்து ஓதும் உண்மையான வைணவ அன்பர்கள் இந்தப் பெயர்க்காரணத்தை தெரிந்து உணர்ந்து கொண்டால் அரங்கம்/திருவரங்கம் என்று அழைக்கவே விரும்புவார்கள் என்பது என் கருத்து.
சரி. நம்முடைய பயண அனுபவங்களுக்கு வருவோம்.
கோயிலுக்கு முன்னாடியிருந்த கடைகளையெல்லாம் பாத்துட்டே கோயிலுக்குள்ள போனோம். போற வழியில் பிரசாதக் கடையில் புளியோதரை வாடை பிடிச்சிக்கிட்டே போனோம்.
உள்ள போனா ஒரே கூட்டம். வரிசையப் பாத்தா அமெரிக்கத் தூதரக வாசல்ல விசாவுக்கு நிக்கிற அளவுக்குப் பெருசா இருக்கு. சமயபுரத்துல வழக்கத்துக்கு மாறா அம்மனைக் குளிரக் குளிரக் கும்பிட்டது நினைவுக்கு வந்தது.
என்ன பண்ணலாம்னு யோசிச்சுக்கிட்டிருந்தப்போ ஒரு மேலும்

2 கருத்துகள்:

Suthan France சொன்னது…

Very good article.

Admin 5 சொன்னது…

plz join http://www.voicebook.wall.fm/join

கருத்துரையிடுக