வெள்ளி, மே 11, 2012

ஆன்மீகம் - 10


ஆக்கம்:வேதா இலங்காதிலகம், டென்மார்க்



ஐந்து டமைகள்.


கடமைகள் ஐந்து இஸ்லாம் கொண்டது.
கலிமாவெனும் மூல மந்திரம், தொழுகை,
கருத்துடை நோன்பு, ஜகாத், ஹஜ்;
கணக்காய் இஸ்லாமியர் பின்பற்றுவார்.
அல்லாஹ் தொழுவதற்குரியவர், முகம்மது
அல்லாஹ்வின் இறுதித் தூதுவர் என்று
உறுதியாய் நம்பி நடத்தலும் அதை
உண்மையாய் மொழிதலும் கலிமாவாகும்.
நாளும் ஐந்து வேளை தொழுகை
நல்ல ஒன்பதாம் மாதம் ரம்லான்
நாட்கள் முழுவதும் நோன்பு இருத்தல்.
நோன்பும் தொழுகையும் இரகசியமல்ல
இருக்கும் செல்வம் நாற்பதில் ஒன்றை
இல்லாதோருக்கு ஆண்டு தோறும் வழங்குதல்
இனிய ஜகாத் எனும் கடமையாம்.
இணைத்து நடப்பார் வாழ்வை வெல்ல.
வசதி வாய்ப்பும் இணைந்தால் மக்காவிற்கு
வாழ்நாளிலொரு முறை யாத்திரையாகுதல்
வாய்த்திடும் ஹஜ் எனும் கடமையாகும்.
ஏய்த்திடலின்றி வாழ்தல் நிறைவாகும்.

6 கருத்துகள்:

Seelan சொன்னது…

Very good Vetha, thanks

Sarvan singapor சொன்னது…

Nice, congratulation

பெயரில்லா சொன்னது…

Thank you sakothara Seelan and sarvan Singapor.
God bless you two.
Thank you Anthimaalai.

Balan france சொன்னது…

All the best to Vetha, following like this article.

vetha (kovaikkavi) சொன்னது…

Balan frace ..Thank you and god bless you....

பெயரில்லா சொன்னது…

கடவுள் ஒருவரே! நாம் கடவுளின் பிள்ளைகள். வேறு எந்த பாகு பாடும் கூடாது. இதனால் தான் நாட்டில் இத்தனை பிரச்சனைகள். மனிதனாக ஒன்று படுவோம்.வேறு பாட்டை களைவோம். எத்தனை சொல்லி கொடுத்தாலும், எத்தனை பாடம் எடுத்தாலும் நடக்காது. ஒரு சில நாளில் மறந்து போகும். தவம் செய்து நம்மில் இருக்கும் பாவ மூட்டையை அழித்து வாழ்வில் சந்தோசமாக இருப்போம். மற்றவரை சந்தோஷ படுத்துவோம்.
நான் சொல்ல போகும் தகவல் அணைத்தும் சித்தர்கள் ஞானிகள் சொன்ன ஞான விளக்கம் பற்றியது. எப்படி வாழ்க்கையை நல்ல படியாக வாழ்வது என்று சொன்னது

ஞானம் என்பது பரிபூரண அறிவு. அது நம்மை அறிந்த பிறகே நடக்கும். நாம் என்பது இந்த உடலோ மனமோ கிடையாது. நான் என்பது உயிர். இதை அனுபமாக இல்லாமல் இருக்கிறது.இதை அநுபவம் ஆக்க வேண்டும். இதை எல்லா ஞானிகளும் சொல்லி சென்று உள்ளனர்.

இதுவரை நாம் மற்றவரிடம் இருந்து தான் எல்லாவற்றையும் கற்று கொண்டோம். சாம்பார் அம்மாவிடம், .... இந்த புதிய பாடத்தை கற்று கொள்ள ஒருவர் தேவை. அவர் தான் குரு. ஞான சற்குரு.

தவம் செய்ய வேண்டும்!!!

தவம் செய்ய நாம் காட்டுக்கு போக வேண்டியதில்லை! குடும்பத்தை விட்டு ஓட வேண்டியதில்லை! காவி உடுத்து தாடி முடி வளர்த்து உருத்திராட்சம் அணிந்து உலகம் சுற்ற வேண்டியதில்லை! நமது உடலை வெறுத்து வருத்தாது துன்புருத்தாது இருக்க வேண்டும்! உணவை வெறுத்து இலை உணவாக வேண்டாம்! கடுமையான ஜப தாபங்கள் வேண்டாம்! சுருக்கமாக கூறுவதனால் ஒன்றும் செய்ய வேண்டாம்! சும்மா இருந்தாலே போதும்! திருமணம் ஞானம் பெற ஒரு தடையல்ல!

தவம் எப்படி செய்ய வேண்டும்? தவம் என்றால் மந்திர ஜபமல்ல! தவம் என்றால் பூஜை செய்வதோ யாகம் வளர்ப்பதோ அல்ல! தவம் என்றால் பிராணாயாமமோ வாசி யோகமோ இன்னபிற யோகங்களோ அல்ல! தவம் என்றால் உடலை வருத்தி செய்யும் எந்த செயலுமல்ல! தவம் என்றால், நான் யார்? என அறிய உணர மெய்ஞ்ஞான சற்குருவிடம் ஞானதானம் பெற்று கேட்டதை உணர்ந்து அறிய சும்மா இருந்து செய்யும் பயிற்சியே! முயற்சியே!

நான் உங்களுக்கு புத்தகம் கொடுக்க ஆவல். எப்படி அனுப்புவது என்று தெரியவில்லை.அதனால் இண்டநெட் இல் அனுப்புகிறேன்.

இதை தான் ஞானிகளும் சித்தர்களும் செய்து வந்தனர். இது உங்களுக்கு புதிதாக இருக்கலாம். இதை ரகசியம் என்று நிறய பேர் சொல்லி தருவது இல்லை.

திரு அருட்பிரகாஷ வள்ளலார் அவர்கள் அருளால் எல்லாம் வெளியே சொல்லி கொண்டு இருக்கிறோம்.

உலகில் பிறந்து ஒவ்வொரு மனிதனும் வாழ்வில் நல்ல படியாக வாழவேண்டும். அதற்க்கு முதலில் நான் யார் என்பதை அனுபவமாக தெரிந்து கொள்ள வேண்டும்.

அப்படி தெரிந்து கொள்ள தவம் செய்ய வேண்டும். தவம் என்பது சும்மா இருப்பது. மனதை பயன்படுத்தி செய்யும் எந்த செயலும் அல்ல.
இறைவன் அருள் வேண்டும் என்றால் சுத்த சைவ உணவு கொண்டு வாழ வேண்டும்.

அனைவருக்கும் சொல்லி கொடுங்க. நன்றி.

லிங்க்ஐ படியுங்க.

http://tamil.vallalyaar.com/?page_id=80


blogs

sagakalvi.blogspot.com
kanmanimaalai.blogspot.in

video
ஞானிகள் ஏன் கோயிலை உருவாக்க வேண்டும்?
http://www.youtube.com/watch?v=dLIBK-eptxg

கருத்துரையிடுக