புதன், மார்ச் 07, 2012

அம்மாவும் அப்பாவும் தூங்கட்டும்......

எல்லா நாளும் நட்சத்திரம் அழகாய்த் தெரிவதில்லை.இன்றும் அப்படித்தான். எனக்கு அழகாய்த் தெரியவில்லை .என்னால் அம்மாவின் முகத்தைப் பார்க்க முடியவில்லை.அப்பாவின் கண்களை நேருக்கு நேர் சந்திக்கத் தைரியமில்லை.அப்பா நண்பர்களின் கேள்விக்குப் பயந்து லீவ் போட்டுவிட்டார்..அம்மாவும்தான்....

தொலை பேசிச் சத்தம் என்னை நடு நடுங்கச் செய்கிறது..இன்றைக்குன்னு பார்த்து எல்லோருக்கும் அவ்வ்ளோ அக்கறை...........கதவை மூடிக் கொண்டாலும் ஓயாமல் விசாரிக்கும் பக்கத்து வீட்டு நலம் விரும்பிகள்?????

சரி இன்றோடு முடியப் போகிறதா? நாளை??? கதவைத் திறந்துதானே ஆக வேண்டும்.அம்மாவும் அப்பாவும் ஆஃபீசுக்குப் போகத்தானே வேண்டும்.என்னால் எவ்வ்ளோ கஷ்டம் அம்மாவுக்கும் அப்பாவுக்கும்....கட்டுப் படுத்த முடியாமல் கண்ணீர் கொட்டியது.

ரெண்டு பேரும் என்னைப் போட்டு நாலு அடி அடித்திருந்தாலும் நல்லாயிருந்திருக்கும்.ஆனால் இப்படி அமைதியா இருக்கறதுதான் என்னைக் கொல்லுது.....
அம்மா அம்மம்மாவிடம் ஃபோனில் சொல்லிக் கொண்டிருந்தாங்க" நான் ஒண்ணுமே சொல்லலைம்மா....அவன் வழியில் விட்டுட்டேன்" அப்படீன்னு.....
அவ்வ்ளோதானா? கணக்கில் அந்த ஐந்து மார்க் கிடைக்காமல் நான் ஃபெயிலாகியதால் என் வாழ்க்கை இன்றோடு முடிந்ததா?அந்த ஐந்து மார்க் ஏன் என் வாழ்வை முடிக்க வேண்டும்?...நானே முடித்துக் கொள்கிறேன்.....ஆமா அது ஒன்றுதான் வழி...... நான் பரீட்சைக்குப் படிக்கும் போது பால் ஜூஸ்னு தந்த அம்மா இன்னிக்கு சாப்பிட வான்னு கூட சொல்லலியே? வாழ்நாள் முழுக்க இப்படி மௌனமா சாவுறதுக்கு ஒரேயடியாச் செத்துப் போறதுதான் நல்லது......அம்மாவும் அப்பாவும் தூங்கட்டும்......

யாரோ கதவு தட்டும் சத்தம் கேட்டது."அவன் ரூமில் இருக்கான்"னு அம்மா சொன்னாங்க. நான் கண்களை இறுக மூடி தலையணையில் முகம் புதைத்துக் கொண்டேன்.......... "நான் யாரையும் எப்படிப் பார்ப்பேன்???உலகமே இருண்டு விடக் கூடாதான்னு இருந்தது.....

அப்பாவும் அம்மாவும் மெல்லிய மேலும் 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக