சனி, ஜனவரி 28, 2012

தாரமும் குருவும் பகுதி - 6.0

ஆக்கம்:இ.சொ.லிங்கதாசன்
பகுதி 6.0 
அல்லைப்பிட்டி 1977
மாலைதீவு விமான நிலையத்தில் தரித்து நிற்கும் விமானம்
மாலைதீவு கடலில் மூழ்கினால் அக்கால கட்டத்தில் மாலைதீவின் சொத்துக்களை வேறு நாடுகளுக்கு பாதுகாப்பாக எவ்வாறு நகர்த்துவது? என்பன போன்ற திட்டங்கள் பற்றி அரசு இப்போதே சிந்திக்க ஆரம்பித்து விட்டது. மாலைதீவு ஒரு இஸ்லாமிய நாடு என்பதால் அரபு நாடுகளுடன் நல்லுறவைப் பேணி வரும் ஒரு நாடு. மாலைதீவு எதிர்காலத்தில் தனது முதலீடுகளை அரபு நாடுகளில் மேற்கொள்வதற்கும் சிந்தித்து வருகிறது. நாட்டை விட்டு மக்கள் வெளியேறும் நிலை ஏற்படும் போது ஒவ்வொரு வெளிநாட்டிலும் தனது மக்களில் எத்தனை பேரைக் குடியேற்றுவது என்பது சம்பந்தமாகவும் மாலைதீவு அரசு சிந்தித்து வருகிறது.
கடந்த இரு வாரங்களுக்கு முன்னர் மேற்குறிப்பிட்ட விடயங்களுடன் 'மாலைதீவு' பற்றிய எனது பதிவினை நிறுத்தியிருந்தேன். மாலைதீவைப் பற்றிக் குறிப்பிடுவதற்கு ஏராளமான தகவல்கள் இருப்பினும், உரிய தருணம் வரும்போது அந்திமாலையில் 'நாடுகாண் பயணம்' பகுதியில் மாலைதீவும் இடம்பெறும் என்பதால் விரிவான தகவலகளைத் தவிர்த்து விட்டு, ஒரு சில பொது அறிவுத் தகவல்களை மட்டும் உங்களோடு பகிர்ந்து கொள்கிறேன்.
******************************
மாலைதீவு திவேஹி இனச் சிறுமி
மாலைதீவு ஒரு இஸ்லாமிய நாடு என்பது உங்களில் பலருக்கும் தெரியும். ஆனால் அவர்களின் மொழியைப் பற்றி அறிந்திருக்கிறீர்களா? அவர்களின் மொழியின் பெயர் 'திவேஹி'(Dhivehi) என்பதாகும். இம்மொழி உலகில் வேறெந்த நாட்டிலும் பேசப்படுவதில்லை. ஆனால் இம்மொழி 'பாலி' மொழியிலிருந்து உருவாகியது என்பதால் இதனை 'சிங்களத்தின் கிளை மொழி' என்று அழைப்பர். இவர்கள் பேசுவது சிங்கள மக்களுக்கு ஓரளவு புரிந்து கொள்ளக் கூடியதாக இருக்கும். இந்நாட்டில் ஆரம்ப காலங்களில்(வரலாற்றுக் காலத்தில்)  குடியேறியவர்கள் சேர நாட்டவர்கள். சேர நாடு 'தமிழ்த் தேசம்' என்பதுடன் கடந்த 500 வருடங்களுக்கு முன்னர் அத் தேசம் கேரள தேசமாக மாறியதுடன், அங்கு பேசப்பட்ட தமிழ் மொழியும், திரிபடைந்து 'மலையாள' மொழியாக மாறியது. இதனாலேயே மலையாளத்தில் பேசினால் தமிழர்களும், தமிழில் பேசினால் மலையாளிகளும் இலகுவில் புரிந்து கொள்கின்றனர். மலையாள மொழியின் எழுத்து வடிவம் தமிழ் மற்றும் சமஸ்கிருத மொழியின் கலப்பு ஆகும். எழுத்து வடிவம் மாறியுள்ளதே தவிர அவர்கள்(மலையாளிகள்) 'முன்னாள் தமிழர்கள்' என்பதே வரலாறு. அல்லைப்பிட்டியைப் பற்றிப் பேச ஆரம்பித்து, பின்னர் அதை விடுத்து 'மாலைதீவைப்' பற்றிப் பேச ஆரம்பித்த நான் இறுதியில் தமிழர்களுக்கும் மலையாளிகளுக்கும் 'முல்லைப் பெரியாறு அணை' விவகாரத்தால் உறவு 'கொதிநிலை' அடைந்திருக்கும் இந்தத் தருணத்தில் மலையாள மொழியைப் பற்றியும், மலையாளிகளின் வரலாறு பற்றியும் ஆய்வு செய்வது பொருத்தமான செயலாக இருக்காது என்பதால் அதை அப்படியே விட்டுவிட்டு மீண்டும் 'மாலை தீவைப்' பற்றிப் பேசுவோம். நான் மேலே குறிப்பிட்டபடி சேர நாட்டில் இருந்தும், ஆபிரிக்காவில் குறிப்பாக 'மடகஸ்கார்' தீவில் இருந்தும் குடியேறியவர்களே மாலைதீவு மக்களின் 'மூதாதையர்கள்' எனக் கருதப் படுகிறது. இவர்கள் தமது சிறிய நிலப் பரப்பில் 
'திவேஹி'(Dhivehi) எழுத்து வடிவம்
ஒரு சில நூற்றாண்டுகள் வரை சுதந்திரமாக எந்தவித தொந்தரவும் இல்லாமல் ஆட்சி செய்து வந்தனர். அதன் பின்னர் அடுத்தடுத்துத் தமிழ் மன்னர்களும், இலங்கையின் சிங்கள மன்னர்களும் இச் சிறிய நாட்டின் மீது படையெடுத்து இந்நாட்டைக் கைப்பற்றி ஆண்டனர். இந்நாட்டைக் குறுகிய காலங்கள் சோழ மன்னனாகிய 'இராஜ ராஜ சோழனும்' அதிக காலங்கள் இலங்கையின் சிங்கள மன்னனாகிய 'மகா பராக்கிரம பாகுவும்' ஆண்டனர். பராக்கிரம பாகுவின் ஆட்சிக் காலத்தில் இந்நாட்டில் பௌத்த ஆலயங்கள் கட்டப் பட்டன என இலங்கையின் 'மகா வம்சம்' கூறுகிறது. இலங்கையின் பராக்கிரம பாகுவின் ஆட்சி, இந்நாட்டை 'அராபியர்கள்' கைப்பற்றியவுடன் முடிவுக்கு வந்தது. இதன் காரணமாகவே இவர்களது 'திவேஹி மொழி' உச்சரிப்பு சிங்கள மொழியை ஒத்ததாக இருப்பினும் எழுத்து வடிவம் அராபிய எழுத்துக்களுடன் ஒத்துப் போகிறது. மேற்படி தீவுகள் ஒரு பூமாலையில் பல பூக்கள் தொடுக்கப் பட்டது போன்ற அமைப்பைக் கொண்டிருப்பதால் 'மாலை தீவுகள்' எனப் பெயர் பெற்றது. இவ்வாறு நாட்டின் பெயர் 'மாலைதீவு' என முழுக்க முழுக்க தமிழ்ப் பெயர் ஆக இருந்து பின்னர் அராபியர்களின் ஆட்சிக் காலத்தில் 'திவேஹி' மொழியில் 'திவேஹி ராஜ்யஹே ஜும்ஹூரியா'(தமிழில் மாலைதீவுக் குடியரசு) என மாற்றம் பெற்றது.
(தொடரும்)

4 கருத்துகள்:

Vetha. Elangathilakam. சொன்னது…

குட்டித் தொகுப்பு மாலை தீவு பற்றி. மிக்க நன்றி.

vinothiny pathmanathan dk சொன்னது…

அருமையான புதிய தகவல்கள். இணைப்பிற்கு நன்றி. தாரமும் குருவும் இந்த தொடர் super

Malar சொன்னது…

Excellent, and very good story.

Lingathasan சொன்னது…

கருத்துரைத்த, பாராட்டிய அனைவருக்கும் உளமார்ந்த நன்றிகள்.

கருத்துரையிடுக