புதன், நவம்பர் 10, 2010

உள்ளத்தைத் தொட்ட பொன்மொழிகள்

தொகுப்பு: சி.சத்தியசீலன்,
ஸ்ரொக்கோம், சுவீடன்


  • நிரந்தர உறக்கத்திற்கு முன் சாதித்துவிடு, நீ வாழ்ந்ததை உலகிற்குப் போதித்துவிடு.

  • நதியைப் பார்த்ததும், நம்மால் நதியாக மாறமுடியவில்லையே என்று எண்ணாதே, எதையும் ஏற்றுச் சகித்து, மற்றவர்களைத் தூய்மையாக்கி, மண்ணையும் வளப்படுத்தும் பண்பை மட்டும் சேர்த்துக்கொள்.

  • மரம் விழுந்தால் வேர் தெரியும், மனிதன் உடல் விழுந்தால் பேர் தெரியும்.

  • குழப்பம் உன் பகைவன், அது நேரத்தைத் தின்றுவிடும், நிம்மதியைக் குலைத்துவிடும், முன்னேற்றத்தைத் தடுத்துவிடும்.

  • எண்ணம் என்பது சக்திவாய்ந்த ஒரு கருவி. உனக்கு நீயே பேசிக்கொள்ளும் வார்த்தைகள் மூலம் உன் வாழ்க்கையைச் சிறப்பான முறையில் அமைத்துக் கொள்ள முடியும்.

  • செய்ய முடியும் என்று நம்பு, முதலில் அதை மனதுக்குள் செய்து பழகு.

  • ஆசைப்படு, அதுவே வெற்றியின் முதல்படி. எத்திசையில் வாழ்க்கை செலுத்தப்பட வேண்டும் என்று சொல்வதும் அதுதான்.

  • சிறிய செயலானாலும் சரி, அதைச் செய்யப்போவதாகச் சொல்லிக்கொண்டு ஆரம்பி, செய்து முடி, தன்னம்பிக்கையை வளப்படுத்திக்கொள்.

  • அதிர்ஷ்ட தேவதையின் கடைக்கண் பார்வை கிடைக்கும் என்று காத்திருக்காதே, முயற்சியில் குதி, அதிர்ஷ்ட தேவதையை நீ போகும் வழியில் காண்பாய்.

  • உலகில் நல்ல சந்தர்ப்பங்களே அதிகம், அதைச் சரியாகப் பயன்படுத்துவதே உனது சாதுரியம்.




2 கருத்துகள்:

பெயரில்லா சொன்னது…

DET ER FINT

nathakumar சொன்னது…

verry verry nice. nanthakumar france.

கருத்துரையிடுக