ஞாயிறு, அக்டோபர் 17, 2010

எந்தக் குழந்தையும் - அத்தியாயம் 4

கர்ப்பகாலம் 1 தொடக்கம் 10 மாதங்கள் வரை தாய், தந்தை கவனத்தில் கொள்ளவேண்டிய முக்கிய விடயங்கள்:
7. கர்ப்பவதியாக இருக்கும் தாய்க்கு, போதிய சத்துள்ள உணவுகள் அவசியம் என்பதைக் கடந்த வாரம் பார்த்தோம், எந்த அளவுக்கு சத்துள்ள உணவுகள் அத்தியாவசியமானதோ, அதேயளவு கர்ப்பவதியான ஒரு பெண்ணுக்கு ஓய்வும், உறக்கமும் அவசியமாகும். ஒரு சாதாரண மனிதன் உறங்கும்போது, அவனது மூளையில் உள்ள பல கலங்கள்(செல்கள்) புதுப்பிக்கப் படுவதோடு, உடலின் ஏனைய பகுதிகளிலுள்ள கலங்கள் பழுது பார்க்கப் படுவதாகவும், இதானால் சராசரியாக உழைக்கின்ற ஒரு மனிதனுக்கு 8 மணித்தியாலங்கள் உறக்கம் அவசியம் என்பது ஆராய்ச்சியாளர்களின் கருத்தாகும். தனது கருவில் ஒரு குழந்தையைச் சுமக்கும் தாயின் விடயத்தில் இது 8 தொடக்கம் 10 மணித்தியாலங்களாக அமைதல் நலம் என்பது மருத்துவ உலகினரின் கணிப்பாகும். நம் ஈழத்தமிழரிடையே ஒரு மரபுவழி நம்பிக்கை நிலவுகிறது, அதாவது "கர்ப்பவதியான தாய் அதிகம் தூங்கினால், கருவிலுள்ள குழந்தையின் தலை பெருத்துவிடும்" இது பிரசவத்தின் போது மிகவும் சிக்கலை
ஏற்படுத்தும் என்பதே அந்த நம்பிக்கையாகும், ஆனால் இது மருத்துவ உலகினரால் உறுதிசெய்யப்படாத, 'தவறான' நம்பிக்கையாகும். ஆனால், எமது மக்களால் அடிக்கடி உபயோகிக்கப்படும் வாசகமாகிய "கர்ப்பிணிப் பெண்ணைத் திடீரென்று (தூக்கத்திலிருந்து) எழுப்பக் கூடாது, அவளது கர்ப்பப் பையில் படைப்புத் தொழிலில் ஈடுபட்டிருக்கும், பிரம்மனின் படைப்புத் தொழில் இதனால் பாதிப்படைகிறது" என்ற வாசகம் மருத்துவ உலகினரின் கருத்தோடு ஒத்துப் போகிறது. அதாவது 'பிரமன்' 'படைப்புத் தொழில்' என்ற விடயங்களில் நம்பிக்கையில்லாத விஞ்ஞான உலகம் கூட 'தூங்குகிற கர்ப்பிணியைத்' தொந்தரவு செய்தல் ஆகாது என்ற விடயத்தில் சாதாரண மக்களின் நம்பிக்கையோடு உடன்படுகிறது.

-அடுத்த வாரமும் தொடரும்- 

1 கருத்து:

kaamathenu சொன்னது…

super super

கருத்துரையிடுக